புது தில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஸ்பெயினில் உள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி… எல்லோரும் தேடிக் கொண்டிருக்கும் ராகுல், ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளார். சட்ட ரீதியாக சோனியாவுக்கு பிரதமராகும் தகுதியில்லை என்றார். மேலும், தனிப்பட்ட முறையில், தில்லி முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியை யாரும் எதிர்க்கவில்லை. பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை. கோல்கத்தாவில் கன்னியாஸ்திரி பலாத்கார விவகாரத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயுடன் காஷ்மீர் முதல்வர் முப்திக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. ஐ.பி.எல்., விவகாரத்தில் சசிதரூரால் தப்பி செல்ல முடியாது. துபாயை சேர்ந்தவர்கள் மூலம் சுனந்தா கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் வழக்கை மூட போலீசார் பணம் பெற்றுக்கொண்டனர் என்று பல தகவல்களைக் கூறியுள்ளார்.
ராகுல் ஸ்பெயில் உள்ளார்: சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari