மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, நூதன முறையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய அரை கிலோ பிளாஸ்டிக் பை, பாட்டில்களை கொடுக்கும் மக்களுக்கு, சுவையான சாப்பாடை இலவசமாக வழங்குகிறார்கள். இந்த விழிப்புணர்வு மக்களிடத்தில் பெரும் வரவேற்பபையும் பெற்று வருகிறது.இதன் மூலம் உணவு இல்லாதவர்களும் பயனடைகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பிற்கும் வகை செய்தது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பிற பிளாஸ்டிக் கழிவுகளுடன் ஏழை எளியவர்கள் உணவு விநியோக மையத்தில் வரிசையில் நிற்பதைக் காணலாம். இந்த முயற்சி கோதல்ஸ் மெமோரியல் பள்ளி மற்றும் நிஷ்கம் கல்சா சேவாவின் பழைய மாணவர்களின் முயற்சி ஆகும். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் பிற பயன்பாட்டிற்கு அனுப்பப்படும். “நாங்கள் இந்த முயற்சியைத் தொடங்கினோம், மக்களிடமிருந்து மிகப்பெரிய பதில் உள்ளது” என்று கோதல்ஸ் நினைவுப் பள்ளி முன்னாள் மாணவர் எஸ்.பி. சிங் சலுஜா கூறினார்.