December 5, 2025, 6:44 PM
26.7 C
Chennai

நபி குறித்துப் பேசி பத்வா போடப்பட்ட இந்து மகா சபை முன்னாள் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரக் கொலை!

lko Kamlesh tiwari - 2025

இந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரி நபி குறித்து அவதூறாக பேசினார் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை அவரின் தலையை எடுப்பவர்களுக்கு 51 லட்சம் சன்மானம் என ஃபத்வா 2015 ல் பிறப்பித்தனர். இன்று கமலேஷ் திவாரி கொலை!

இந்து மகாசபா முன்னாள் தலைவரும் இந்து சமாஜ் கட்சியின் நிறுவனருமான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் கொல்லப் பட்டுள்ளார். வெளியான தகவல்களின்படி, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளார்.

லக்னோவில் உள்ள நாகா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்து சமாஜ் கட்சியின் குர்ஷித் பேக் அலுவலகத்தில் திவாரி இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. கொலைகாரர்களில் ஒருவர் காவி ஆடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் இருந்து ஒரு ரிவால்வரை போலீசார் மீட்டுள்ளனர். தொடக்கக் கட்ட விசாரணையில், கொலையாளிகள் திவாரிக்கு தாங்கள் தெரிந்தவர்கள் என்று கூறியுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

திவாரியைச் சந்திக்க வந்த இரண்டு பேரும் பாக்கெட் இனிப்புகளுக்குள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தனராம். அவர்கள் திவாரி மீது தாக்குதல் தொடுத்து, உடனே அங்கிருந்து ஓடி விட்டனர். திவாரி உடனடியாக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

முகமது நபி குறித்து பாலியல் ரீதியாக விமர்சனத்தை எழுப்பியதாக, 2015 ஆம் ஆண்டில் கமலேஷ் திவாரி அப்போதைய அகிலேஷ் யாதவ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.

திவாரிக்கு மரண தண்டனை கோரி தியோபந்த், சஹரன்பூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள முஸ்லிம் குழுக்கள் பெரிய அளவில் கலவரங்களையும் போராட்டங்களையும் நடத்தியிருந்தன.

இதை அடுத்து திவாரி சிறையில் இருந்தார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தது. செப்டம்பர் 2016 இல், அலகாபாத் உயர் நீதிமன்றம் இறுதியாக அவர் மீதான என்எஸ்ஏ குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது! அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆயினும், முகமது நபி குறித்த கருத்துக்களுக்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கையை அகிலேஷ் எடுத்தது, அது தொடர்பாக கமலேஷ் திவாரி மீதான கைது, தொடர்ந்து அவருக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக இந்து குழுக்களிடையே இது கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே நேரம், மேற்கு வங்காளத்தின் மால்டாவின் கலியாசக்கில், திவாரி கருத்துக்கு எதிராக ‘எதிர்ப்புத் தெரிவிக்கையில்’ முஸ்லிம்கள் பரவலான வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். திவாரியின் பேச்சுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கலவரக்கார முஸ்லிம்கள் கலியாசக்கில் கூடி, கடைகளை சூறையாடி, பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்! கலவரக்கார முஸ்லிம்களால் ஒரு காவல் நிலையமும் தீக்கு இரையானது.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று எஸ்பி தலைவர் அசாம் கான் கூறியதைத் தொடர்ந்து, முகமது நபி உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் என்று திவாரி கருத்து தெரிவித்திருந்தார். திவாரியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவருக்கு எதிராக பத்வா விதிக்கப் பட்டது. இந்நிலையில், திவாரி இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories