நபி குறித்துப் பேசி பத்வா போடப்பட்ட இந்து மகா சபை முன்னாள் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரக் கொலை!

lko Kamlesh tiwari - 2026

இந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரி நபி குறித்து அவதூறாக பேசினார் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை அவரின் தலையை எடுப்பவர்களுக்கு 51 லட்சம் சன்மானம் என ஃபத்வா 2015 ல் பிறப்பித்தனர். இன்று கமலேஷ் திவாரி கொலை!

இந்து மகாசபா முன்னாள் தலைவரும் இந்து சமாஜ் கட்சியின் நிறுவனருமான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் கொல்லப் பட்டுள்ளார். வெளியான தகவல்களின்படி, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது கழுத்துப் பகுதியில் வெட்டப்பட்டுள்ளார்.

லக்னோவில் உள்ள நாகா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்து சமாஜ் கட்சியின் குர்ஷித் பேக் அலுவலகத்தில் திவாரி இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. கொலைகாரர்களில் ஒருவர் காவி ஆடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

கொலை நடந்த இடத்தில் இருந்து ஒரு ரிவால்வரை போலீசார் மீட்டுள்ளனர். தொடக்கக் கட்ட விசாரணையில், கொலையாளிகள் திவாரிக்கு தாங்கள் தெரிந்தவர்கள் என்று கூறியுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

திவாரியைச் சந்திக்க வந்த இரண்டு பேரும் பாக்கெட் இனிப்புகளுக்குள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தனராம். அவர்கள் திவாரி மீது தாக்குதல் தொடுத்து, உடனே அங்கிருந்து ஓடி விட்டனர். திவாரி உடனடியாக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

முகமது நபி குறித்து பாலியல் ரீதியாக விமர்சனத்தை எழுப்பியதாக, 2015 ஆம் ஆண்டில் கமலேஷ் திவாரி அப்போதைய அகிலேஷ் யாதவ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.

திவாரிக்கு மரண தண்டனை கோரி தியோபந்த், சஹரன்பூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள முஸ்லிம் குழுக்கள் பெரிய அளவில் கலவரங்களையும் போராட்டங்களையும் நடத்தியிருந்தன.

இதை அடுத்து திவாரி சிறையில் இருந்தார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தது. செப்டம்பர் 2016 இல், அலகாபாத் உயர் நீதிமன்றம் இறுதியாக அவர் மீதான என்எஸ்ஏ குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது! அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

ஆயினும், முகமது நபி குறித்த கருத்துக்களுக்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கையை அகிலேஷ் எடுத்தது, அது தொடர்பாக கமலேஷ் திவாரி மீதான கைது, தொடர்ந்து அவருக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக இந்து குழுக்களிடையே இது கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே நேரம், மேற்கு வங்காளத்தின் மால்டாவின் கலியாசக்கில், திவாரி கருத்துக்கு எதிராக ‘எதிர்ப்புத் தெரிவிக்கையில்’ முஸ்லிம்கள் பரவலான வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். திவாரியின் பேச்சுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கலவரக்கார முஸ்லிம்கள் கலியாசக்கில் கூடி, கடைகளை சூறையாடி, பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்! கலவரக்கார முஸ்லிம்களால் ஒரு காவல் நிலையமும் தீக்கு இரையானது.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று எஸ்பி தலைவர் அசாம் கான் கூறியதைத் தொடர்ந்து, முகமது நபி உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் என்று திவாரி கருத்து தெரிவித்திருந்தார். திவாரியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவருக்கு எதிராக பத்வா விதிக்கப் பட்டது. இந்நிலையில், திவாரி இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories