ஆந்திர பிரதேசம், தெலங்கானாவுக்கு மத்திய அரசின் ‘நற்செய்தி’!

Published:

jagan kcr - 2026

ஆந்திரா தெலங்காணாவுக்கு மத்திய அரசு அளித்த குட் நியூஸ் இதுதான். இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் புதிதாக 16 ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது! ஆந்திராவுக்கு 9 பேர். தெலங்காணாவிற்கு 7 பேர் என 16 அதிகாரிகளை ஒதுக்கியுள்ளது.

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இருவருக்கும் மத்திய அரசு இனிப்பான செய்தியை அனுப்பி உள்ளது. தெலுங்கு மாநிலங்களுக்கு புதிதாக 16 ஐஏஎஸ்.,களை அனுப்ப உத்தர விட்டுள்ளது.

இரு மாநிலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் போதுமான அளவு இல்லாமல் இருந்தார்கள். அதோடுகூட ஏற்கனவே இருந்த சிலரும் மத்திய அரசின் சர்வீசுக்கு சென்று விட்டார்கள். இந்த நிலையில் மாநில அரசின் திட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகள் குறைவாக இருந்தனர் .

அதோடு தெலங்காணா மாவட்டங்களின் எண்ணிக்கை 10 லிருந்து 33 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் கூட மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் அதிக அளவு ஐஏஎஸ் அதிகாரிகளின் வரவு இனிய செய்தியாக வெளிவந்து உள்ளது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img