விபத்துக்குப் பின் தப்பியோடி… காட்டில் தனியாக 14 நாட்கள்… கைதான டிரைவர்!

karnataka driver in ap forest - 2026

காட்டில் தனியாக 14 நாட்கள்: சித்தூர் மலைச்சாலையில் இம்மாதம் 15ஆம் தேதி விபத்துக்குள்ளான டெம்போ டிராவலர் வண்டியின் டிரைவர் ‘ராமக்ககாரி’ பாலகிருஷ்ணா (30) காணாமல் போனார். அவரை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் 14 நாட்களாக காட்டில் தனியாக ஒளிந்திருந்த அவரை கண்டுபிடித்தார்கள். 14 நாட்களாக உணவின்றி பலவீனமாக கிடந்த அவரை திங்களன்று ‘மாரேடுமில்லி’ போலீசார் கைது செய்தனர் . தற்போது அவருக்கு மாரேடுமில்லி முதன்மை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்தும் அனந்தபுரம் மாவட்டம் ‘மடகசிர’ என்ற ஊரில் இருந்தும் பக்தர்கள் சிலர் டெம்போ டிராவலர் வாகனத்தை ஏற்பாடு செய்துகொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டனர்.

பத்ராசலத்தில் சீதாராமரை தரிசித்துக்கொண்டு அன்னவரம் சத்யநாராயண சுவாமி தரிசனத்திற்காக சென்று கொண்டிருந்தபோது மாரேடுமில்லி – சித்தூர் மலைச் சாலையில் டெம்போ கவிழ்ந்தது .

விபத்து நடந்த போது வாகனத்தில் 13 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர். மீதி பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். மடகசிர கிராமத்தைச் சேர்ந்த டெம்போ டிரைவர் பாலகிருஷ்ணா தலைமறைவானார்.

சாலை விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர் பாலகிருஷ்ணா அச்சத்தால் அண்மையில் இருந்த காட்டுப் பகுதிக்கு ஓடிவிட்டார். அப்போது முதல் காட்டிலேயே வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அங்கு கிடைத்த ஊற்று நீரை அருந்தியும் காலம் கழித்து வந்தார்.

அருகிலிருந்த கிராமத்து மலைவாசிகள் காட்டிற்குச் சென்றபோது பாலகிருஷ்ணாவைப் பார்த்து வியந்தனர். விசாரித்து விஷயம் அறிந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உணவின்றி பலவீனமாக நடக்க முடியாமல் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் விபத்து நடந்த டெம்போ வேன் டிரைவர் என்ன ஆனார் என்ற சந்தேகம் நிவர்த்தி ஆனது. மாயமாகி போன டிரைவர் கிடைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories