விபத்துக்குப் பின் தப்பியோடி… காட்டில் தனியாக 14 நாட்கள்… கைதான டிரைவர்!

karnataka driver in ap forest - 2026

காட்டில் தனியாக 14 நாட்கள்: சித்தூர் மலைச்சாலையில் இம்மாதம் 15ஆம் தேதி விபத்துக்குள்ளான டெம்போ டிராவலர் வண்டியின் டிரைவர் ‘ராமக்ககாரி’ பாலகிருஷ்ணா (30) காணாமல் போனார். அவரை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் 14 நாட்களாக காட்டில் தனியாக ஒளிந்திருந்த அவரை கண்டுபிடித்தார்கள். 14 நாட்களாக உணவின்றி பலவீனமாக கிடந்த அவரை திங்களன்று ‘மாரேடுமில்லி’ போலீசார் கைது செய்தனர் . தற்போது அவருக்கு மாரேடுமில்லி முதன்மை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்தும் அனந்தபுரம் மாவட்டம் ‘மடகசிர’ என்ற ஊரில் இருந்தும் பக்தர்கள் சிலர் டெம்போ டிராவலர் வாகனத்தை ஏற்பாடு செய்துகொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டனர்.

பத்ராசலத்தில் சீதாராமரை தரிசித்துக்கொண்டு அன்னவரம் சத்யநாராயண சுவாமி தரிசனத்திற்காக சென்று கொண்டிருந்தபோது மாரேடுமில்லி – சித்தூர் மலைச் சாலையில் டெம்போ கவிழ்ந்தது .

விபத்து நடந்த போது வாகனத்தில் 13 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர். மீதி பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். மடகசிர கிராமத்தைச் சேர்ந்த டெம்போ டிரைவர் பாலகிருஷ்ணா தலைமறைவானார்.

சாலை விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர் பாலகிருஷ்ணா அச்சத்தால் அண்மையில் இருந்த காட்டுப் பகுதிக்கு ஓடிவிட்டார். அப்போது முதல் காட்டிலேயே வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அங்கு கிடைத்த ஊற்று நீரை அருந்தியும் காலம் கழித்து வந்தார்.

அருகிலிருந்த கிராமத்து மலைவாசிகள் காட்டிற்குச் சென்றபோது பாலகிருஷ்ணாவைப் பார்த்து வியந்தனர். விசாரித்து விஷயம் அறிந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உணவின்றி பலவீனமாக நடக்க முடியாமல் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் விபத்து நடந்த டெம்போ வேன் டிரைவர் என்ன ஆனார் என்ற சந்தேகம் நிவர்த்தி ஆனது. மாயமாகி போன டிரைவர் கிடைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories