விபத்துக்குப் பின் தப்பியோடி… காட்டில் தனியாக 14 நாட்கள்… கைதான டிரைவர்!

Published:

karnataka driver in ap forest - 2026

காட்டில் தனியாக 14 நாட்கள்: சித்தூர் மலைச்சாலையில் இம்மாதம் 15ஆம் தேதி விபத்துக்குள்ளான டெம்போ டிராவலர் வண்டியின் டிரைவர் ‘ராமக்ககாரி’ பாலகிருஷ்ணா (30) காணாமல் போனார். அவரை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் 14 நாட்களாக காட்டில் தனியாக ஒளிந்திருந்த அவரை கண்டுபிடித்தார்கள். 14 நாட்களாக உணவின்றி பலவீனமாக கிடந்த அவரை திங்களன்று ‘மாரேடுமில்லி’ போலீசார் கைது செய்தனர் . தற்போது அவருக்கு மாரேடுமில்லி முதன்மை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்தும் அனந்தபுரம் மாவட்டம் ‘மடகசிர’ என்ற ஊரில் இருந்தும் பக்தர்கள் சிலர் டெம்போ டிராவலர் வாகனத்தை ஏற்பாடு செய்துகொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டனர்.

பத்ராசலத்தில் சீதாராமரை தரிசித்துக்கொண்டு அன்னவரம் சத்யநாராயண சுவாமி தரிசனத்திற்காக சென்று கொண்டிருந்தபோது மாரேடுமில்லி – சித்தூர் மலைச் சாலையில் டெம்போ கவிழ்ந்தது .

விபத்து நடந்த போது வாகனத்தில் 13 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் விபத்தில் மரணம் அடைந்தனர். மீதி பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். மடகசிர கிராமத்தைச் சேர்ந்த டெம்போ டிரைவர் பாலகிருஷ்ணா தலைமறைவானார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

சாலை விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர் பாலகிருஷ்ணா அச்சத்தால் அண்மையில் இருந்த காட்டுப் பகுதிக்கு ஓடிவிட்டார். அப்போது முதல் காட்டிலேயே வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அங்கு கிடைத்த ஊற்று நீரை அருந்தியும் காலம் கழித்து வந்தார்.

அருகிலிருந்த கிராமத்து மலைவாசிகள் காட்டிற்குச் சென்றபோது பாலகிருஷ்ணாவைப் பார்த்து வியந்தனர். விசாரித்து விஷயம் அறிந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உணவின்றி பலவீனமாக நடக்க முடியாமல் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் விபத்து நடந்த டெம்போ வேன் டிரைவர் என்ன ஆனார் என்ற சந்தேகம் நிவர்த்தி ஆனது. மாயமாகி போன டிரைவர் கிடைத்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img