ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலால்… பெண் சிசுவை உயிரோடு புதைக்க முயன்ற இருவர் கைது!

Published:

child burried - 2026

அக்டோபர் 31ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு ஹைதராபாத் ஜூபிளி பஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு ஆட்டோ டிரைவர் தன் ஆட்டோவை நிறுத்தினார். அருகில் இருந்த காலி மைதானத்தில் இருவர் சந்தேகத்துக்கு இடமாக குழி தோண்டுவதை கவனித்து அருகில் சென்று பார்த்தார்.

ஒருவர் கையில் ஒரு துணி மூட்டை இருந்தது. அருகில் இன்னொருவர் கைகளாலேயே குழி பறித்து மண்ணைத் தோண்டி கொண்டிருந்தார்.

சந்தேகப்பட்டு உடனே ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து விசாரித்தனர். தன் பேத்தியான பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் என்றார் ஒருவர். அதனை புதைத்துவிட்டு தம் ஊரான கரீம்நகருக்கு செல்லப் போவதாகக் கூறினார்.

child burried1 - 2026

பஸ்ஸில் குழந்தை சவத்தை ஏற்க மாட்டார்கள் என்பதால் இங்கேயே புதைக்க போவதாகவும் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த காலி இடத்தில் குழி தோண்டுவதாகவும் தெரிவித்தனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

போலீஸ் கன்ஸ்டபிலஸ் எஸ். வெங்கடராமகிருஷ்ணா துணி மூட்டையை அவிழ்த்து பார்க்கையில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரோடு அசைந்து கொண்டிருந்தது.

அவர்கள் இருவரையும் கைது செய்து குழந்தையை காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர் போலீசார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img