அதெல்லாம் சும்மா… சிதம்பரத்துக்கு ஒண்ணுமே இல்லீங்க… நல்லாத்தான் இருக்காரு..!

chidambaram fine - 2026

முன்னா மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நன்றாக இருக்கிறார் என்று அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், ப.சிதம்பரத்துக்கு திகார் சிறை அறையில் வசதிகள் சிலவற்றைச் செய்து கொடுக்க வேண்டும் என்று மட்டும் அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தற்போது மீண்டும் மறுத்துள்ளது.

சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை தேவைப்படுவதால் ஐதராபாத் அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இதனால், கபில் சிபல் சொல்வது போல் சிதம்பரத்தின் உடல் நிலை மோசமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி, தில்லி நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவர் குழுவுக்கு அக்.31 நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவக் குழு, இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிதம்பரத்தின் உல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய தேவையில்லை. சிறை அறையை சுத்தம் செய்து, கொசுவலை அளித்தால் போதும்! என்று தெரிவித்திருந்தது.

இதை அடுத்து, ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த தில்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்திற்கு கொசுவலை, முக கவசம் அளிக்க வேண்டும் என்றும், சில வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவக் குழு வாரம் ஒருமுறை சிதம்பரத்தை பரிசோதித்து சிகிச்சை அளிக்கலாம். மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்கத் தேவையில்லை என மருத்துவக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, புற நோயாளியாக சிதம்பரத்திற்கு சிகிச்சை அளிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories