என்.டி.ஆர்., மனைவி லட்சுமி பார்வதிக்கு ஜெகன் அளித்த கௌரவம்!

Published:

lakshmiparvathi jagan - 2026

ஆந்திர பிரதேச தெலுங்கு அகாடமி சேர்பர்சன் ஆக லக்ஷ்மி பார்வதியை நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

நந்தமூரி லட்சுமி பார்வதிக்கு ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய பதவியை அளித்துள்ளார். லட்சுமி பார்வதி ஒய்எஸ்ஆர் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்.

நந்தமூரி தாரக ராமாராவு மனைவியான லக்ஷ்மி பார்வதி, சந்திரபாபு நாயுடுவை தீவரமான விமர்சனங்களால் தாக்கக் கூடியவர். தொடக்கத்தில் லட்சுமி பார்வதி தனிக் கட்சி தொடங்கி சில காலம் அரசியலில் ஈடுபட்டார். பின்னர் பரபரப்பான அரசியல் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். பின்னாளில், ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்தார். ஜகன் எதிர் கட்சியில் இருந்தபோது அவருக்கு துணை நின்றார்.

ஆந்திர சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் ஜகன் அவருக்குத் தகுந்த பதவியை கொடுத்துள்ளார் என்று கட்சியினர் மகிழ்ந்துள்ளனர். லட்சுமி பார்வதிக்கு புராண இலக்கியங்கள் மீது சிறந்த ஞானம் உள்ளது .அவர் வீட்டில் இதுபோன்ற புத்தகங்கள் நிறைய உள்ளன.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் பலமாக குரல் எழுப்பிய லட்சமி பார்வதிக்கு ஜெகன் அரசு நியமன பதவியை அளித்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
lakshmiparvathi jagan2 - 2026

முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்டிஆரின் மனைவி லட்சுமி பார்வதி, சந்திரபாபு நாயுடுவை மிகக் கடுமையாக விமர்சிப்பது வழக்கம். பின்னாளில், ஜகன் மோகனின் கட்சிக்கு ஆயுதமாகத் திகழ்ந்தார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தெலுங்கு தேசம் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். தேர்தலின்போது சந்திரபாபு நாயுடுவையும் அவர் மகன் நரா லோகேஷையும் இலக்காகக் கொண்டு தீவிரமாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார். அந்த நேரத்தில் லட்சுமி பார்வதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து தெலுங்கு தேசம் கட்சி பிரச்சாரம் செய்தது.

வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்களை எதிர்கொண்ட லட்சுமி பார்வதி ஜகன் பின்னால் இருந்து கொண்டு பலமாக தன் குரலை உயர்த்தினார். அவர் உண்மையில் எம்எல்சி பதவியை விரும்பினார் என்று கூறப்பட்டது. ஆர்டிசி சேர்பர்சனாக நியமிக்கப்படுவார் என்று கூட செய்தி வந்தது. ஆனால் ஜெகன் அரசாங்கம் தெலுகு அகாடமி சேர்பர்சனாக அவரை நியமித்துள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img