புல்லு தின்னு பசுக்கள் மரணித்ததாம்! விஜயவாடா கோசாலையில் கோரம்!

ap cows dead - 2026

விஜயவாடா கோசாலையில் 86 பசுக்கள் இறந்தது எப்படி என்று, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறிய காரணத்தைக் கேட்டு விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜயவாடா கோசாலையில் பசு மாடுகள் சந்தேகத்துக்கு இடமாக மரணித்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, ஒரேயடியாக 86 பசு மாடுகள் இறந்து கிடந்ததால் என்னதான் நடந்திருக்கும் என்று தெரியாத புதிராகவே இருந்தது.

எனவே, இது குறித்து விசாரித்து அறிய, அரசு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், புலனாய்வுக் குழு அதிகாரிகள் பசுக்களின் இறப்புக்கு காரணம் கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அறிக்கையில், பசுவுக்கு போடும் புல்லில் நைட்ரேட் சதவிகிதம் அதிகமாக இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புல்லில் இருக்க வேண்டிய நைட்ரேட் 1.6 சதவீதத்திற்கு பதிலாக, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக இருந்ததால், புல்லே விஷமாக மாறியதாக அதிகாரிகள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இறந்த பசுக்கள் தின்ற பச்சைப் புல்லில் 3.79 கிராமிலிருந்து 4.47 கிராம் வரை நைட்ரேட் இருந்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக அளவு நைட்ரேட் ஹீமோகுளோபினுக்குள் சென்று சேர்ந்த மெதிமோகுளோபினாக மாறி பிராண வாயுவை எடுத்துக் கொள்ளும் சக்தியை இழக்கச் செய்கிறது. அதன் காரணமாக பசுக்கள் இறந்தன என்று பரிசோதனையில் தெரியவந்தது.

பரிசோதனைகளுக்காக எஃப்என்எல் லேப், வெடர்னரி லேப், பரிசோதனை லேப் ஆகியவை செய்த ஆராய்ச்சிகளின் பின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்தனராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories