புல்லு தின்னு பசுக்கள் மரணித்ததாம்! விஜயவாடா கோசாலையில் கோரம்!

Published:

ap cows dead - 2026

விஜயவாடா கோசாலையில் 86 பசுக்கள் இறந்தது எப்படி என்று, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறிய காரணத்தைக் கேட்டு விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜயவாடா கோசாலையில் பசு மாடுகள் சந்தேகத்துக்கு இடமாக மரணித்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, ஒரேயடியாக 86 பசு மாடுகள் இறந்து கிடந்ததால் என்னதான் நடந்திருக்கும் என்று தெரியாத புதிராகவே இருந்தது.

எனவே, இது குறித்து விசாரித்து அறிய, அரசு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், புலனாய்வுக் குழு அதிகாரிகள் பசுக்களின் இறப்புக்கு காரணம் கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அறிக்கையில், பசுவுக்கு போடும் புல்லில் நைட்ரேட் சதவிகிதம் அதிகமாக இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புல்லில் இருக்க வேண்டிய நைட்ரேட் 1.6 சதவீதத்திற்கு பதிலாக, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக இருந்ததால், புல்லே விஷமாக மாறியதாக அதிகாரிகள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இறந்த பசுக்கள் தின்ற பச்சைப் புல்லில் 3.79 கிராமிலிருந்து 4.47 கிராம் வரை நைட்ரேட் இருந்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

அதிக அளவு நைட்ரேட் ஹீமோகுளோபினுக்குள் சென்று சேர்ந்த மெதிமோகுளோபினாக மாறி பிராண வாயுவை எடுத்துக் கொள்ளும் சக்தியை இழக்கச் செய்கிறது. அதன் காரணமாக பசுக்கள் இறந்தன என்று பரிசோதனையில் தெரியவந்தது.

பரிசோதனைகளுக்காக எஃப்என்எல் லேப், வெடர்னரி லேப், பரிசோதனை லேப் ஆகியவை செய்த ஆராய்ச்சிகளின் பின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்தனராம்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img