புல்லு தின்னு பசுக்கள் மரணித்ததாம்! விஜயவாடா கோசாலையில் கோரம்!

ap cows dead - 2026

விஜயவாடா கோசாலையில் 86 பசுக்கள் இறந்தது எப்படி என்று, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கூறிய காரணத்தைக் கேட்டு விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜயவாடா கோசாலையில் பசு மாடுகள் சந்தேகத்துக்கு இடமாக மரணித்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, ஒரேயடியாக 86 பசு மாடுகள் இறந்து கிடந்ததால் என்னதான் நடந்திருக்கும் என்று தெரியாத புதிராகவே இருந்தது.

எனவே, இது குறித்து விசாரித்து அறிய, அரசு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், புலனாய்வுக் குழு அதிகாரிகள் பசுக்களின் இறப்புக்கு காரணம் கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அறிக்கையில், பசுவுக்கு போடும் புல்லில் நைட்ரேட் சதவிகிதம் அதிகமாக இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புல்லில் இருக்க வேண்டிய நைட்ரேட் 1.6 சதவீதத்திற்கு பதிலாக, இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக இருந்ததால், புல்லே விஷமாக மாறியதாக அதிகாரிகள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இறந்த பசுக்கள் தின்ற பச்சைப் புல்லில் 3.79 கிராமிலிருந்து 4.47 கிராம் வரை நைட்ரேட் இருந்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக அளவு நைட்ரேட் ஹீமோகுளோபினுக்குள் சென்று சேர்ந்த மெதிமோகுளோபினாக மாறி பிராண வாயுவை எடுத்துக் கொள்ளும் சக்தியை இழக்கச் செய்கிறது. அதன் காரணமாக பசுக்கள் இறந்தன என்று பரிசோதனையில் தெரியவந்தது.

பரிசோதனைகளுக்காக எஃப்என்எல் லேப், வெடர்னரி லேப், பரிசோதனை லேப் ஆகியவை செய்த ஆராய்ச்சிகளின் பின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் இந்த முடிவுக்கு வந்தனராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories