சிறுமியை சுவரோடு மோதித் தள்ளிய கார்… துடிதுடித்து சுருண்டு விழுந்த சிறுமி! வைரல் வீடியோ!

Published:

car hit 9year old girl in navi mumbai - 2026

சிறுமியை சுவரில் மோதி தள்ளிய கார்… துடித்து விழுந்த சிறுமி. இளகிய மனம் உள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம்.! என்று கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

நவீ மும்பையில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டியில் 9 வயது சிறுமி மீது கார் மோதியது. கேட்டிலிருந்து சொசைட்டியின் உள்ளே நுழைந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சிறுமியை சுவரோடு சுவராக மோதி இழுத்துச் சென்று தள்ளியது.

விளையாடுவதற்காக சுவர் ஓரமாக தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்த சிறுமியை சுவரோடு ஒட்டி உரசி மோதியது. அதனால் சிறுமி சுவருக்கும் காருக்கும் இடையே நசுங்கிப் போனாள். அந்த சிறுமியின் பெயர் சாக்சி சிங் என்று தெரிகிறது.

தீவிரமாகக் காயமடைந்த சிறுமியை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கார் ஓட்டி, சிறுமி மீது மோதிய நபர் ஆசிரியராகப் பணிபுரியும் நரேஷ் மாத்ரே (44) என்பவரின் டிரைவர். டிரைவர் கார் ஓட்டி வந்த போது, மிகக் குறுகிய கேட் வழியாக கார் நகர்ந்து வந்ததும், திடீரென எதிரே சிறுமியைப் பார்த்த பதற்றத்தில், பிரேக் மீது கால் வைக்க எடுத்த போது, ஆக்சிலேட்டர் அதிக அழுத்தம் கொடுக்கப் பட்டு விட்டதாகவும் போலீஸாரிடம் அந்த டிரைவர் கூறியுள்ளார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கலம்போலி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் சதிஷ் கெய்க்வாட் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் சிறுமி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குச் சென்று புகார் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால், சிறுமியின் தந்தை புகார் கொடுக்க மறுத்துவிட்டாராம். இதனால் போலீஸார், மாத்ரே மீது வேகமாகக் கார் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img