இன்று… குருநானக் ஜயந்தி தினம்!

guru nanak - 2026

இன்று குருநானக் பிறந்த நாள். சீக்கியர்களின் மதகுரு குருநானக் ஜயந்தி கார்த்திகை பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. சந்திரனை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடப்படும் சாந்திரமான காலண்டர்படி இன்று கார்த்திகை பௌர்ணமி.

சாதாரணமாகவே சிறப்பான நாளாக கருதப்படும் கார்த்திகை பௌர்ணமி குருநானக் பிறந்த நாளும் கூட சேர்ந்து கொண்டதால் பஞ்சாபியர்களுக்கு உயர்ந்த பண்டிகையாக ஆகிறது.

குருநானக் ஜெயந்தியை பஞ்சாபியர்கள் “குருபூரப்” என்றழைப்பர். குருநானக் ஜெயந்தியை இந்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

1469ல் தற்போதைய பாகிஸ்தானில் லாகூர் அருகிலுள்ள ‘நஸ்கானா சாகிப்’ என்ற இடத்தில் குருநானக் பிறந்தார். அவர் பிறந்தது ஹிந்துக் குடும்பத்தில்!

நானக் ஹிந்து முஸ்லிம் மத நூல்களைப் படித்து அறிந்தார். இவ்விரண்டு மதங்களுக்கும் வேறான சீக்கிய மதத்தை ஸ்தாபித்து வழிபடும் குருவானார். மொத்தம் 10 சீக்கிய மத குருமார்களில் குருநானக் முதல் குரு.

gurugrantasahib - 2026

லாகூரில் குருநானக் பிறந்த புனிதத் தலம் ‘குருத்வாரா ஜனம் ஆஸ்தான்’ என்று பெயர் பெற்றுள்ளது. குருநானக் ஏப்ரல் 15 இல் பிறந்ததாகக் கூறுபவர்களும் உள்ளனர். ஆனால் கார்த்திகை பௌர்ணமியை நானக் பிறந்த தினமாக ஏற்று கொண்டாடுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

பஞ்சாபியர்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும் குருநானக்கை வணங்கி ‘குருபூரப்’ பண்டிகையை கொண்டாடுகிறார்கள். சீக்கியர்கள் ஒரே கடவுளை வழிபடுபவர்கள். ஓம்காரத்தை ஒரே தெய்வமாக பூஜை செய்பவர்கள்.

குருநானக் ஜெயந்தி தொடர்பாக குருத்வாராவில் சீக்கியர்கள் தங்கள் புனித கிரந்தமான ‘குரு கிரந்த சாகிப்’ நூலை 48 மணி நேரம் இடைவிடாமல் படிப்பார்கள். இவ்வாறு படிப்பதை ‘அகண்ட படனம்’ என்பர். இந்த குரு கிரந்த சாகிப் அகண்ட படனத்தை குருநானக் ஜெயந்திக்கு முதல் நாளே படித்து முடித்து விடுவார்கள்.

இனி ஜயந்தி நாளன்று விடிகாலையே ‘ப்ரபாத் ஃபேரிஸ்’ என்ற பெயரில் ஊர்வலம் நடக்கும். இது குருத்வாராவில் இருந்து தொடங்கி எல்லா வீதிகளுக்கும் செல்லும். ‘நிஷான் சாஹேப்’ என்ற சீக்கிய கொடிகளை ஏந்தி ஊர்வலம் செல்வர்.

குரு கிரந்த சாஹேப் நூலை பல்லக்கில் வைத்து பூக்களால் அலங்கரிப்பர். பக்தர்கள் ‘சிங் சாஹேப் ‘ மற்றும் பிற பக்தி கீதங்களை இசைத்தபடி நடப்பார்கள். வாத்தியங்களை அதற்கு ஏற்ப இசைப்பர். கதாகாலட்சேபம் முடிந்த பின் பக்தர்களுக்கு சிறப்பு விருந்து அளிப்பார்கள்.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories