ரயில்வே: ஒப்பந்த பணியாளர் பணி ரத்து! புதிய பணியாளர் நியமனம்!

train 1 - 2026

ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் பாதுகாப்பு பிரிவு உட்பட மொத்தம் 2.30 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களுக்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

அதன்படி, தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, வடக்கு, தென்மேற்கு, தெற்கு மத்திய ரயில்வே உட்பட 16 ரயில்வே மண்டலங்களிலும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.

தனியார் ஒப்பந்த ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த வகையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.

குறிப்பாக, இன்ஜினீயரிங் பிரிவு, போர்ட்டர்கள், பாயின்ட்ஸ் மேன்கள், மின்பாதையில் பணியாற்றும் கலாசிகள், உதவி ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள், மின்பிரிவு மற்றும் இயந்திரப் பிரிவுகளில் அதிக அளவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பணியில் இருந்தபோது கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டது.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

இதற்கிடையே நிரந்த ஊழியர்களை நியமிக்கும் பணியை ரயில்வே வாரியம் மேற்கொண்டது. இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையில் ரயில்வே பொதுமேலாளர்கள் கூட்டம் தில்லியில் சமீபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய ஊழியர்கள் நியமனம் மற்றும் ஏற்கெனவே தற்காலிகமாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணி நியமனத்தை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: காலி இடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டனர்.

சில பிரிவுகளில் ஒப்பந்த ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். ரயில்வேயில் புதிய பணியாளர்கள் நியமனங்களுக்கான தேர்வு முடிந்து, ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்படவுள்ளது.

இதனால், தற்காலிகமாக பணியாற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களின் பணி நியமனங்களை படிப்படியாக ரத்து செய்யும் உத்தரவு விரைவில் வெளியாகும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories