December 5, 2025, 2:51 AM
24.5 C
Chennai

ரயில்வே: ஒப்பந்த பணியாளர் பணி ரத்து! புதிய பணியாளர் நியமனம்!

train 1 - 2025

ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் பாதுகாப்பு பிரிவு உட்பட மொத்தம் 2.30 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களுக்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை ஓய்வு பெற்ற ஊழியர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

அதன்படி, தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, வடக்கு, தென்மேற்கு, தெற்கு மத்திய ரயில்வே உட்பட 16 ரயில்வே மண்டலங்களிலும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.

தனியார் ஒப்பந்த ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த வகையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.

குறிப்பாக, இன்ஜினீயரிங் பிரிவு, போர்ட்டர்கள், பாயின்ட்ஸ் மேன்கள், மின்பாதையில் பணியாற்றும் கலாசிகள், உதவி ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள், மின்பிரிவு மற்றும் இயந்திரப் பிரிவுகளில் அதிக அளவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பணியில் இருந்தபோது கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டது.

இதற்கிடையே நிரந்த ஊழியர்களை நியமிக்கும் பணியை ரயில்வே வாரியம் மேற்கொண்டது. இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையில் ரயில்வே பொதுமேலாளர்கள் கூட்டம் தில்லியில் சமீபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய ஊழியர்கள் நியமனம் மற்றும் ஏற்கெனவே தற்காலிகமாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணி நியமனத்தை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: காலி இடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டனர்.

சில பிரிவுகளில் ஒப்பந்த ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். ரயில்வேயில் புதிய பணியாளர்கள் நியமனங்களுக்கான தேர்வு முடிந்து, ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்படவுள்ளது.

இதனால், தற்காலிகமாக பணியாற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களின் பணி நியமனங்களை படிப்படியாக ரத்து செய்யும் உத்தரவு விரைவில் வெளியாகும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories