பில்கேட்சை சந்தித்த மெகா ஸ்டார் மருமகள்!

Published:

bilgates megastar - 2026

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள் ‘உபாசனா கொணிதெல’ வின் நிர்வாகத் திறன் அனைவருக்கும் தெரியும்தான்!

அப்போலோ லைஃப், அப்போலோ பவுண்டேஷன் தலைவியாக அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தொடர்ந்து யூடியூப் வழியாக தொடர்பில் இருந்து வருகிறார்.

இதே தளத்தில் ஃபிட்னெஸ் அறிவுரைகளை அளித்து ஏகமாக ஃபாலோயர்களை சம்பாதித்து வைத்துள்ளார். சோஷியல் மீடியாவில் கணவரும் நடிகருமான ராம் சரண் தொடர்புடைய வேலைகளோடு கூட சினிமா செய்திகளைப் பற்றியும் விவரித்து மெகா ஸ்டார் ரசிகர்களோடும் ‘டச்’சில் உள்ளார்.

சோசியல் மீடியா வழியாக லட்சக்கணக்கில் ரசிகர்கள் இவரை ஆர்வத்தோடு ஃபாலோ செய்கிறார்கள். தற்போது, ஹைதராபாத்தில் உள்ள சிறந்த மகளிர் தொழில் முனைவோர்களில் ஒருவராக கௌரவிக்கப் படுகிறார் உபாசனா.

பல உலகளாவிய மகாநாடுகள், தொழிலதிபர்களின் கூட்டங்கள் போன்றவற்றில் அற்புதமாக உரையாற்றி அனைவரையும் கவர்ந்துள்ளார் .

bilgates - 2026

பல சர்வதேச மேடைகளில் உபாசனா பாராட்டுக்களை பெற்றுள்ளார். ஆரோக்கியமான சமூக அமைப்புக்கான அவருடைய முயற்சி இளைஞர்களிடம் ஒவ்வொரு முறையும் நேர்மறையான சிந்தனையை நிரப்பி வருகிறது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

அண்மையில் உலக செல்வந்தர்களில் நம்பர் ஒன்னாக ஒளிவீசும் தி கிரேட் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸை சந்தித்தார் உபாசனா.

இத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ட்வீட் செய்து அந்த ‘ஃபேன் மொமெண்ட்’ போட்டோவோடு தம்ஸ்அப் மெசேஜ் ஷேர் செய்துள்ளார்.

இந்தியன் பிலாந்தரபி இனிஷியேடிவ் ( ஐபிஐ ) மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்து அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

upasana - 2026
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img