நொடிக்கு நொடி.. திக் திக்.. திருப்பம்! ‘மகா’ அரசியல்!

Published:

uttav amitsha - 2026

மகாராஷ்டிரா அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. தேசியவாத காங். கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. தேசிய வாத காங்கிரஸில் உறவினர்களான அஜித்பவார், சரத்பவார் இடையே பிளவு ஏற்பட்டு, இரு தரப்புக்கும் ஆதரவாளர்கள் என கட்சி பிரிந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் இது குற்த்துக் கூறுகையில், உத்தவ் தாக்கரேவும், சரத் பவாரும் இன்று மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள் என்று கூறினார். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டது என்று சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

supriya sule - 2026

எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் எதிராக செயல்பட்டுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணிக்கும், சரத்பவாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

மேலும், சிவசேனாவின் சஞ்சய் ராவத் இது குறித்து கூறிய போது, மக்களை ஏமாற்றி விட்டார் அஜித்பவார் என்று சாடியுள்ளார். மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார், அஜித்பவார் என்று காட்டமாக அவர் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, உத்தவ் தாக்கரேவை இன்று சந்திக்கிறார், சரத்பவார் என்று சஞ்சய்ராவத் தகவல் வெளியிட்டுள்ளார். ஒருபுறம் பாஜக., கூட்டணியுடன் ஆட்சி அமைக்கப் பட்டுள்ள நிலையில், மறுபுறம் நேற்றைய இரவில் முடிக்கப்பட்ட நிலையில் இருந்து மீண்டும் அரசியலை தொடர்ந்து நடத்தி வருகிறது சிவசேனா.

மேலும் படிக்க..

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img