மதுவோடு திருப்பதி லட்டுவை ஒப்பிட்டதற்காக சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு.
“மதுவின் விலைகளை உயர்த்தியதைப் போலவே லட்டு விலையையும் உயர்த்தி உள்ளீர்கள். மதுவில் இருந்து மக்களை விலக்குவதாக கூறி திருமலையில் இருந்து பக்தர்களை விலக்குகிறீர்கள்” என்ற சந்திரபாபுவின் விமர்சனத்தால் திருப்பதியில் வழக்கு பதிவு.
ஹிந்துக்கள் பரம பவித்திரமாக ஏற்கும் திருமலை பிரசாதமான லட்டுவை மதுவோடு ஒப்பிட்டதற்காக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவாகி உள்ளது.
முதல்வர் ஒய்எஸ் ஜகன், மதுவின் விலைகளை அதிகரித்துள்ளது போலவே திருமலை லட்டு பிரசாதத்தின் விலையையும் அதிகரித்து உள்ளார் என்றும் ஏழைகளுக்கு லட்டு கிடைக்காதபடி செய்கிறார் என்றும் நாயுடு விமரிசித்தார்.
மது விலக்கு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு விலைகளை உயர்த்தி உள்ளார் என்றும் அதே போல தான் திருமலைக்கு பக்தர்கள் வரக்கூடாது என்ற உத்தேசத்தோடு லட்டு விலைகளையும் அறைகளின் வாடகையையும் உயர்த்தி உள்ளார் என்றும் சந்திரபாபு கூறினார்.
அதனால் அவர் மேல் திருப்பதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது.
திருமலைக்கு தரிசனத்துக்கு செல்லும் போது ஜெகன் தாம் திருப்பதி ஆலயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர் என்று டிக்ளரேஷன் செய்வதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி டிடிபி முன்பே தீவிரமாக குற்றம்சாட்டியுள்ளது.
அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியை இலக்காக்கக் கூடாது என்று ஆந்திரா அமைச்சர் ‘கொடாலி நானி’ விமர்சனம் செய்தார்.
திருமலை பற்றி அமைச்சரின் விமர்சனங்களுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்று தெலுகுதேசம் கட்சியைச் சேர்ந்த ‘தேவினேனி’ உமா மஹேஸ்வர ராவு டிமாண்ட் செய்தார்.
மொத்தத்தில் ஆந்திராவின் அரசியல் தற்போது தெய்வங்களைச் சுற்றி வருகிறது என்றே கூற வேண்டும்.