அமித்ஷாவை பாராட்டு மழையில் நனைத்த சந்திரபாபு நாயுடு!

Published:

chandra babu naidu e1565862389210 - 2026

அமித்ஷாவை பாராட்டு மழையில் நனைத்தார் சந்திரபாபு நாயுடு.

மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு மழையில் நனைத்தார்.

அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட இந்திய வரைபடத்தில் ஆந்திரா தலைநகர் அமராவதி குறிப்பிடப்படவில்லை என்று எங்கும் விமர்சனம் எழுந்தது.

இந்திய வரைபடத்தில் ஆந்திரப் பிரதேசம் இருந்தாலும் தலைநகர் குறிப்பிடப்படாததால் விவாதத்திற்கு உள்ளானது.

இது குறித்து லோக்சபாவில் டிடிபி எம்பி ‘கல்லா’ஜயதேவ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன்ரெட்டி பேசுகையில் விரைவில் திருத்தப்பட்ட மேப் வெளியிடுவோம் என்று உறுதியளித்தார்.

IMG 20191123 WA0033 - 2026

கூறியபடியே சனிக்கிழமை இன்று மத்திய அரசு புது மேப் வெளியிட்டது.

சர்வே ஆஃப் இண்டியா வெளியிட்ட இந்த புது மேப்பில் ஏபி தலைநகராக அமராவதியை குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆந்திர பிரதேஷ் தலைநகராக அமராவதியை குறிப்பிட்டு விரைவாக புது மேப் வெளியிட்டதற்காக அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்தார். இந்த ஒரு பணியால் அவர் தெலுங்கு மக்களை மிக அருகில் நெருங்கி விட்டதாக பாராட்டு மழை பொழிந்தார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!
amithsha hbd - 2026

அதேபோல் மத்திய உள்துறை துணை அமைச்சர் கிஷன்ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார்.

இந்திய வரைபடத்தில் அமராவதியை சேர்த்து உடனுக்குடன் வெளியிட்டதற்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img