December 5, 2025, 4:11 PM
27.9 C
Chennai

ஒருதலைக் காதலால் சுற்றிய இளைஞன்; கட்டிவைத்து உரித்து நிர்வாணமாக ஓடவிட்ட கிராமத்தினர்!

onesidelove - 2025

ஒரு தலைக்காதலால், பஞ்சாப் மாநிலத்தில், ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்த இளைஞனை, கிராமத்து மக்கள் கட்டி வைத்து உரித்து, நிர்வாணமாக டூ வீலரில் அமரவைத்து ஓட ஓட விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குர்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸத்திவிண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கண்டு காதல் வயப்பட்டு, ஒருதலைக்காதலால் அவரையே சுற்றிச் சுற்றி வந்துள்ளார்.

வழக்கமான காதல் கதைகளில் வருவது போல், அந்தப் பெண்ணைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் ரொமாண்டிக் லுக் விட்டு, அவரையே சுற்றிச் சுற்றி வந்து ஏகப்பட்ட திறமைகளையும் காட்டியுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணுக்கோ இவற்றில் துளியும் விருப்பம் இல்லாமல் போய், விலகிச் சென்றிருக்கிறார். ஆனாலும் அந்த இளைஞர் விடுவதாயில்லை.

இவரது ஒருதலைக் காதல் விவகாரத்தை அந்தப் பெண்ணுக்கு வேண்டிய நண்பர்களும், உறவினர்களும், கிராம மக்களும் என பலரும் கவனித்து வந்துள்ளனர். இதற்கு முடிவு கட்ட ஒரு நாள் வரும் என்று நினைத்திருக்கின்றனர்.

கடந்த வாரம் ஒரு நாள், தனது செல்போன் எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அதை அந்தப் பெண்ணின் பின் சென்று அவரை நோக்கி வீசியுள்ளான் அந்த இளைஞன். இதனால் கோபமும் அச்சமும் அடைந்த அந்தப் பெண், குய்யோ முறையோ என்று கத்தி கூப்பாடு போட்டார். அந்த சத்தத்தில் ஒட்டுமொத்த கிராமமும் திரண்டு விட்டது.

அவ்வளவுதான்… அந்த இளைஞனை சுற்றி வளைத்தனர். சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். அந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த அந்த இளைஞன் கையெடுத்துக் கும்பிட்டு, விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளான்.

அந்த இளைஞனை குறிப்பிட்ட அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். அவனும் அவ்வாறே கேட்டான். ஆனாலும் கோபம் அடங்காத கிராமத்தினர், அவனது ஆடைகளைக் களைந்தனர். அவனை நிர்வாணமாக்கி, அவனது பைக்கில் ஏற்றி, துரத்தி விட்டனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகத் தளங்களில் வைரலானது. இது போலீஸாரின் கவனத்துக்கும் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் புகார் கொடுக்கவில்லை என்றாலும், வீடியோவை வைத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories