நெஞ்சை உருக்கும் சம்பவம்! அரசு பஸ் மோதி உயிரிழந்த பெண் பொறியாளர்! தாயின் ஏக்கத்தில் கதவருகே காத்திருக்கும் குழந்தைகள்!

Published:

sohini saxena vinodh kumar accident - 2026
  • ஹைதராபாதில் ஆர்டிசி பஸ் அடித்துச் சென்ற இளம்பெண்.
  • விபத்தில் டிசிஎஸ் பெண் பொறியாளர் மரணம்.
  • தற்காலிக டிரைவரை அடித்து உதைத்த பொதுமக்கள்.

டிசிஎஸ்ஸில் வேலை செய்யும் ஓர் இளம்பெண்ணை அரசுப் பேருந்து பலி கொண்டது. பஸ் சக்கரங்களில் நசுங்கி அந்தப் பெண் அங்கேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்கு தற்காலிக டிரைவரின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாரா ஹில்ஸ் ரோடு எண் 12 ல் ஆர்டிசி பஸ் டிரைவரால் இந்த விபத்து ஏற்பட்டது. ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணை பின்னாலிருந்து பஸ் மோதியது. பெண்ணின் தலைமீது பஸ் சக்கரம் ஏறியதால் அந்தப் பெண் அங்கேயே கொடூரமாக உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவருடைய தலை சிதைந்து போனது.

sohini saxena accident3 - 2026

விபத்தில் உயிரிழந்த பெண் டிசிஎஸ் ஊழியர் சோஹினி சக்சேனா (26). சோஹினி செவ்வாயன்று (நவ.26) மதியம் தன் இரு சக்கர வாகனத்தில் மாசப் டாங்கிலிருந்து பஞ்சாரா ஹில்சை நோக்கி வரும் போது இந்த விபத்து நேர்ந்தது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

விபத்துக்கு காரணமான தற்காலிக டிரைவரை அங்கிருந்தவர்களும் பயணிகளும் பிடித்து தாக்கினர். உடைகளை அவிழ்த்து அடித்து நொறுக்கினர். ஆத்திரத்தோடு பஸ்ஸையும் தாக்கினர். பெண்ணின் உடலருகில் போராட்டம் நடத்தினர்.

அதனால் மாசப் டாங்க், பஞ்சகுட்டா, மெஹிதிபட்னம் மார்க்கத்தில் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் இளைஞர்கள் சிலர் இறந்த உடல் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டதை பார்த்து பலரும் பொறுப்பற்ற அவர்களின் செயலுக்காக வருந்தினர்.

sohini saxena accident - 2026

சோஹினி சக்சேனாவின் கணவர் வினித் குமாரும் இரண்டு சிறு குழந்தைகளும் சோஹினியின் இழப்புக்காகக் கதறித் துடிக்கின்றனர். சோஹினி சக்சேனா, வினித்குமார் தம்பதிக்கு மூன்று வயதில் இரட்டைக் குழந்தைகள். குழந்தைகள் இரண்டும் கதவருகில் நின்று கொண்டு தாய் வருவாள் வருவாள் என்று எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருந்தது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சாலை விபத்தில் தம் தாயைப் பறிகொடுத்த குழந்தைகளை சமாதானப் படுத்த முடியாமல் அவர்களது தந்தை வினித் குமார் சோக மயமானார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img