ஹைதராபாத் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்து தீயிட்டு எரித்து படுகொலை செய்யப் பட்ட விவகாரத்தில், ரேப்ஜிஹாத் செய்தவனை அரபு நாடுகளில் இருப்பது போன்று பொதுமக்கள் முன்னிலையில் அதை வெட்டி பின்னர் தலையை வெட்டி தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆத்திரத்தில் குமுறுகின்றனர் ஹைதராபாத் வாசிகள்.
குறிப்பாக டிவிட்டர் சமூக தளத்தில், டாக்டர் பிரியங்கா ரெட்டி விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப் பட்டு வருகிறது.
லாரி ஓட்டுநர் மொஹம்மத் பாஷா என்பவன் முக்கியக் குற்றவாளியாக கைது செய்யப் பட்டிருக்கிறான். இவன் மஹ்பூப்நகர் மாவட்டம் நாராயணபேட்டைச் சேர்ந்தவன். அவனுடன் கூடிகண்ட்லாவைச் சேர்ந்த அவீன் என்ற லாரி டிரைவரும், சிவா என்ற கிளீனரும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என்று கோரிக்கைகள் பலமாக எழுந்துள்ளன.
இது இன்னுமொரு நிர்பயா விவகாரம் போல் ஆகியுள்ளது என்று கூறும் பலரும், தண்டனைகள் கடுமையாக இல்லாதவரை இதுபோன்ற குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும் என்கின்றனர்.
நம் நாட்டு சட்டப்படி, அவன் 20 வருடம் சிறையில் இருப்பான், அதன் பின்னர் தூக்கிலிட வேண்டிய காலம் வரும்போது, அவனை உச்ச நீதிமன்றம் கருணையுடன் மன்னித்து வெளியே விடும். அல்லது கருணை மனு போட்டு, குடியரசுத் தலைவருக்கு அணுகுவார்கள். இப்போதே நிர்பயா விவகாரத்தில் குற்றவாளிகள் ஏதோ சலுகையை அனுபவித்துவிட்டு, சகஜமாகத்தானே உள்ளனர்.?! நம் நாட்டு சட்டங்கள் இந்த விவகாரத்தில் ரொம்பவே ஓட்டைகள் நிறைந்தவை என்று பொருமுகின்றனர் பலர்.
இவர்களுக்கு இது போன்ற சட்டங்களின் தண்டனை போதாது! பொதுமக்கள் முன்னிலையில், ‘அதை’ வெட்ட வேண்டும். பின்னர் இந்தக் காட்டுமிராண்டிகளின் கையைக் காலை வெட்டி அதன் பின்னர் தூக்கில் போட வேண்டும்… என்று கோபத்தின் உச்சத்தில் உணர்ச்சி வசத்தில் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குற்றவாளியின் கைகால்களை வெட்டவேண்டும். அவனைப் பார்க்கும் பிறருக்கு குற்றம் செய்ய பயம் வர வேண்டும் என்று மகளிர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.