பதற வைக்கும் பயங்கரம்… பிரியங்கா உடல் கிடந்த இடத்துக்கு அருகில்… எரிந்த நிலையில் மேலும் ஒரு பெண் உடல்!

lady burnt alive hyderabad - 2026

சம்ஷாபாதில் மற்றும் ஒரு பெண் மீது பாலியல் வன்முறை, கொலை, உடல் எரிப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப் பட்டது. ஆனால் அது தற்கொலை என்று போலீஸார் தற்போது கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் பரபரப்பாக மாறிய பிரியங்கா ரெட்டி கொலையை ஜீரணிக்க முடியாமல் அனைவரும் வருந்திவரும் நிலையில் 24 மணி நேரத்திற்குள் சம்ஷாபாதில் அதே போன்று இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர். சம்ஷாபாத் சித்துலகுட்டா சாலையில் ‘பங்காரு மைசம்மா’ ஆலயத்தின் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகக் கொடூரமாக பெண்ணைக் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் உள்ளது. பெண்ணை கொன்று பின் எரித்து இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

பிரியாங்கா கொலை நடந்து 24 மணி நேரம் கடக்கும் முன்பே அதே பிரதேசத்தில் இன்னொரு பெண் கொலைக்கு ஆளாகி இருப்பது பரபரப்பாக மாறியுள்ளது. தினமும் பூஜை நடக்கும் பங்காரு மைசம்மா ஆலயம் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். சுற்றுப்புறங்களை எல்லாம் பரிசீலித்தனர். கோவில் உள்ள பிரதேசத்தில் சாலை அருகிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது. சுவர் அருகில் பெண்ணை கொன்றுள்ள தடயங்கள் தெரிகின்றன… என்று போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சம்ஷாபாத் சித்துலகுட்டா அருகில் பங்கரு மைசம்மா ஆலயத்தின் அருகில் எரிந்த நிலையில் கிடந்த பெண் வழக்கில் முக்கிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன . அந்தப் பெண் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்தனர் . இறந்த பெண் புரானாபூல் என்ற இடத்தில் உள்ள பாபாபோலாதாஸ் நகர் தூள்பேட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிங்கின் மனைவி கவிதா பாய் (35). என்று போலீசார் அடையாளம் கண்டனர்.

அவர் மனநிலை சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டதாக சம்ஷாபாத் டிஜிபி பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வெளிக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories