என் மகனை சுட்டுக் கொல்லுங்க சார்..! பிரியங்கா வழக்கில் கைதான சென்னகேசவலு தாய் ஆவேசம்!

Published:

hyderabad accust mother - 2026

என் மகனை சுட்டுக் கொல்லுங்கள் சார்!.. என்று ஆவேசக் குரல் எழுப்புகிறார், பிரியங்கா கொலை வழக்கில் நான்காவது குற்றவாளியான சென்ன கேசவலுவின் தாய்.

என் மகன் இப்படிச் செய்வான் என்று நினைக்கவே இல்லை. ஒரு பெண்ணை காதலித்து திருமணம் புரிந்து கொண்டான். நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது.

முன்பு நன்றாகத்தான் இருந்தான். அந்த முஸ்லிம் பையனுடன் சேர்ந்து திரிந்ததால் கெட்டுப் போய்விட்டான் என்று சொல்லி சென்ன கேசவலுவின் தாய் அழுது புலம்பினார்.

ஒரு கட்டத்தில் ஆவேசமான அவர், பிரியங்காவை எப்படிக் கொன்றார்களோ அதே போல் என் மகனையும் கொல்லுங்கள் என்றார். என் மகன் இதுபோல் கீழ்த்தரமான செயல் செய்ததால் என் கணவர் தற்கொலைக்கு முயன்றார். இப்போது ஊரெல்லாம் எங்களைப் பற்றியே பேசுகிறார்கள். அவனால் எங்களுக்கு பெருத்த அவமானம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

basha mohammed - 2026
மொஹம்மத் பாஷாவின் தாய்

ஆரிஃப், லாரி ரிப்பேராகி விட்டதென்று என் மகனை அழைத்துச் சென்றான். இப்போது ஊரெல்லாம் எங்களைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. அவனை தூக்கில் போட்டுக் கொல்லுங்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

நான் மட்டுமா ஒன்பது மாசம் சுமந்து பெற்றேன்? பிரியங்காவின் அம்மாவும் தானே ஒன்பது மாசம் சுமந்து பெற்றாள்? என்று அந்தத் தாய் கூறியது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

அதே நேரம், முதல் குற்றவாளி என குற்றம் சாட்டப் பட்டுள்ள மொஹம்மது பாஷாவின் தாயார், அவன் தவறே செய்திருந்தாலும், அவனை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இதனையும் இன்று ஊடகங்களில் இரு தாய்மார்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லி விவாதிக்கிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img