எச்சரிக்கை! இனி அந்த பெண்ணின் பெயர் திசா… போட்டோ போட வேண்டாம்!

Published:

IMG 20191201 WA0047 - 2026

எச்சரிக்கை …. இனி பெயர் போட்டோ போட வேண்டாம். சம்ஷாபாதில் பாதிக்கப்பட்டுள்ள பெண் பெயரை திசா என்று மாற்றம்.

சம்ஷாபாத்தில் பாதிப்புக்குள்ளான பெண்ணின் பெயரை இனி திசா என்று அழைக்க வேண்டும் என்று போலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தப் பெண் மற்றும் அவர் குடும்பத்தினர் போட்டோக்கள் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

‘ஜஸ்டிஸ் ஃபர் திசா’ வுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றனர். இதுதொடர்பாக போலீசார் அதிகாரபூர்வமாக பெண் பெயரை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

நிர்பயா சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரோடு குடும்பத்தினர் விவரங்களும் வெளியிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பாதிப்புக்குள்ளான இந்தப் பெண்ணின் பெயரைக் கூட மாற்ற தீர்மானித்தனர். இனி திசா என்ற பெயரில் விவரங்களை வெளியிட வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண், பெற்றோர், தங்கை போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பிரசாரம் ஆவதால் போலீசார் இந்த முடிவு எடுத்துள்ளனர்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜஸ்டிஸ் ஃபர் திசா என்ற பெயரில் குறிப்பிட வேண்டுமென்று சைபராபாத் சிபி சஜ்ஜனார் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சம்மதிக்க செய்ததாக தெரிவித்தார்.

சோஷல் மீடியா, பிரசார ஊடகங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜஸ்டிஸ் ஃபர் திசா வுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img