December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

நிர்பயா குற்றவாளிகள் தூக்கு! ஹேங்மேன் தேடல்:

hangman - 2025

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட ஹேங்மேன் இல்லாததால் வேறு மாநிலங்களில் ஆள் தேடி வருவதாக தில்லி திஹார் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மிக மோசமாக தாக்கப்பட்ட அப்பெண்ணுக்கு தில்லியிலும் பின்னர் அரசு செலவிலேயே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபத் மருத்துவமனையிலும் சிகிச்சை நடந்தது. ஆனாலும், உள் உறுப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் நிர்பயா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நிர்பயாவுக்கு நீதி கேட்டு தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை முன்னர் நடந்த போராட்டம் வரலாறு காணாததாக இருந்தது.
நிர்பயா மரணத்துக்குப் பின்னர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் காவல்துறையினர் கைது செய்தனர். ராம்சிங் திஹார் சிறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தில்லி திஹார் சிறையில் அடைபட்டிருக்கும் நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேசிய தில்லி திஹார் சிறை அதிகாரி ஒருவர், இங்கு தூக்கிலிடும் பணியைச் செய்யும் ஹேங்மேன் இல்லை. அதனால் தேவை ஏற்படும்போது வெளிமாநிலங்களில் இருந்து ஹேங்மேனைப் பெறுவோம் என்றார்.

நால்வரில் வினய் சர்மா (23) என்ற குற்றவாளி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் தில்லி அரசாங்கம் அந்தக் கருணை மனுவை நிராகரிக்குமாறு மிகவும் பலமாக பரிந்துரைத்தது.

மேலும், தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், “இது மிகக் கொடிய குற்றம். வினய் சர்மா இந்தக் குற்றத்தில் மோசமான பங்காற்றியிருக்கிறார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டால்தான் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.

எனவே, எந்நேரமும் இந்த கருணை மனு நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட திஹார் சிறை ஆயத்தமாகி வருகிறது.

இதற்கிடையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியைச் செய்ய தான் தயாராக இருப்பதாக ராமநாதபுரம் ஏட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதமும் அனுப்பி உள்ளார்.
சுபாஷ் சீனிவாசன் (வயது 42) என்ற அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணியாற்றுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories