நிர்பயா குற்றவாளிகள் தூக்கு! ஹேங்மேன் தேடல்:

hangman - 2026

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட ஹேங்மேன் இல்லாததால் வேறு மாநிலங்களில் ஆள் தேடி வருவதாக தில்லி திஹார் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மிக மோசமாக தாக்கப்பட்ட அப்பெண்ணுக்கு தில்லியிலும் பின்னர் அரசு செலவிலேயே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபத் மருத்துவமனையிலும் சிகிச்சை நடந்தது. ஆனாலும், உள் உறுப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் நிர்பயா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நிர்பயாவுக்கு நீதி கேட்டு தில்லி குடியரசுத் தலைவர் மாளிகை முன்னர் நடந்த போராட்டம் வரலாறு காணாததாக இருந்தது.
நிர்பயா மரணத்துக்குப் பின்னர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் காவல்துறையினர் கைது செய்தனர். ராம்சிங் திஹார் சிறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தில்லி திஹார் சிறையில் அடைபட்டிருக்கும் நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேசிய தில்லி திஹார் சிறை அதிகாரி ஒருவர், இங்கு தூக்கிலிடும் பணியைச் செய்யும் ஹேங்மேன் இல்லை. அதனால் தேவை ஏற்படும்போது வெளிமாநிலங்களில் இருந்து ஹேங்மேனைப் பெறுவோம் என்றார்.

நால்வரில் வினய் சர்மா (23) என்ற குற்றவாளி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் தில்லி அரசாங்கம் அந்தக் கருணை மனுவை நிராகரிக்குமாறு மிகவும் பலமாக பரிந்துரைத்தது.

மேலும், தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், “இது மிகக் கொடிய குற்றம். வினய் சர்மா இந்தக் குற்றத்தில் மோசமான பங்காற்றியிருக்கிறார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டால்தான் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.

எனவே, எந்நேரமும் இந்த கருணை மனு நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட திஹார் சிறை ஆயத்தமாகி வருகிறது.

இதற்கிடையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியைச் செய்ய தான் தயாராக இருப்பதாக ராமநாதபுரம் ஏட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதமும் அனுப்பி உள்ளார்.
சுபாஷ் சீனிவாசன் (வயது 42) என்ற அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணியாற்றுகிறார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories