திஷா கொலை குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி குறித்த பரபரப்பான பின்னணி!

Published:

IMG 20191221 WA0030 - 2026

திசா பாலியல் வன்கொலை வழக்கு குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி ரேணுகா பற்றி பரபரப்பு உண்மைகள்.

நாராயணபேட்டை மாவட்டம் மக்தல் மண்டலம் குடிகண்ட்ல கிராமத்தில் சிறுவர் சம்ரக்ஷண நிலைய ஊழியர் வெள்ளிக்கிழமை சென்று விசாரித்தார்.

குற்றவாளி சென்னகேசவலுவின் மனைவி படித்த பள்ளியில் நடத்திய விசாரணையில் அவள் வயது 13 ஆண்டுகள் 6 மாதங்கள் என்று தெரியவந்தது.

திசா வன்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான சென்னகேசவலுவின் மனைவி மைனர் என்பதால் சென்ன கேசவலுவின் பெற்றோரோடு சைல்ட் வெல்ஃபேர் அதிகாரி உரையாடினார்.

IMG 20191221 WA0031 - 2026

ரேணுகா தற்போது 6 மாத கர்ப்பிணி. பெற்றோர் இல்லாததால் சிறு வயதிலிருந்தே சித்தப்பா மற்றும் தந்தைவழிப் பாட்டி வீட்டில் வளர்ந்தாள்.

சென்ன கேசவலுவை காதல் திருமணம் செய்து கொண்ட பின் புகுந்த வீட்டிற்கு வந்தாள்.

அவளுக்கு பதினெட்டு வயது வரும்வரை சைல்டு வெல்ஃபேர் பாலர் சதனில் பாதுகாப்பு அளிப்பதாக அதிகாரிகள் சென்னகேசவலுவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

அந்தப் பெண்ணுக்கு ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர். அவர்கள் தற்போது சித்தப்பா வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.

அவர்களையாவது பாலர் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பும்படி அதிகாரிகள் சித்தப்பாவிடம் வினவினர்.

ரேணுகாவின் தங்கை தம்மிடம் தான் இருப்பாள் என்றும் வேண்டுமானால் தம்பியை பாலர் பாதுகாப்பு நிலையத்துக்கு அனுப்புகிறோம் என்றும் சித்தப்பா கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img