spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநாக்க அறுத்துடுவேன்.. பொம்பளன்னு கூட பாக்க மாட்டேன்! ‘டிவி டிபேட்டில் ரவுண்டு கட்டிய எம்.எல்.ஏ.,’!

நாக்க அறுத்துடுவேன்.. பொம்பளன்னு கூட பாக்க மாட்டேன்! ‘டிவி டிபேட்டில் ரவுண்டு கட்டிய எம்.எல்.ஏ.,’!

- Advertisement -
tv debate mla

நாக்கை அறுத்து விடுவேன்… பொம்பள என்று கூட பார்க்க மாட்டேன்… என்று, தொலைக்காட்சியின் லைவ் டெலிகாஸ்டில் ஒய்சிபி எம்எல்ஏ நெருப்பைக் கக்கினார்.

“பைத்தியக்காரத்தனமாக பேசினால் மரியாதை இருக்காது.. தேர்தலில் தோற்றுப் போய் மக்களால் செருப்படி வாங்கிக்கூட வெட்கமில்லாமல் பேச வந்துட்டாங்க…” என்று தெலுகுதேசம் மகளிர் தலைவி மீது ஒய்சிபி எம்எல்ஏ தீவிரமாக எரிந்து விழுந்தார்.

“நாக்கு அறுந்து விடும்.. ஜாக்கிரதை!” என்று தெலுங்குதேசம் மகிளா தலைவரை தீவிரமாக எச்சரித்தார் ஆட்சியிலிருக்கும் ஒய் சிபி எம்எல்ஏ. முதல்வர் ஒய்எஸ் ஜகன் மீது விமர்சனம் செய்ததால் எம்எல்ஏ பொறுமையிழந்து இந்த எச்சரிக்கை அளித்தார். வாயை மூடு என்று எரிந்து விழுந்தார்.

ஒரு டிவி சேனல் இன்டர்வியூவில் பங்குகொண்ட தலைவர்கள் மத்தியில் தீவிரமாக வாக்குவாதம் எழுந்தது.

தலைநகர் அமராவதி மீது சர்ச்சை நடக்கும் சந்தர்ப்பத்தில் தெலுங்குதேசம் மகளிர் தலைவர் பஞ்சமர்தி அனுராதா தலைநகர் குறித்து பேசுகையில், அமைச்சர் ‘போத்சா’ செய்த விமரிசனத்தை கண்டித்தார். சந்திரபாபுவை பச்சோந்தி என்று குறிப்பிட்டதால் மகளிர் தலைவர் கோபமாக விமர்சித்தார்.

tv debate mla1

கூகுளில் பச்சோந்தி என்று தேடினால் யார் பெயரும் வராது. ஆனால் கைதி நம்பர் 6093 என்று தேடினால் சிஎம் முதல்வர் ஜெகன் பெயர் வரும் என்று தீவிரமாக விமர்சனம் செய்தார். அதேபோல் ஆந்திரா 420 யார் என்று கேட்டால் கூட ஜெகன்மோகன் ரெட்டி பெயர் வரும் என்று மிகவும் சூடாக விமர்சித்தார்.

சர்ச்சையில் பங்குபெற்ற விஜயவாடா சென்ட்ரல் எம்எல்ஏ மல்லாதி விஷ்ணு, தெலுகு தேசம் தலைவர் அனுராதாவின் விமர்சனத்தை குறித்து தீவிரமாக மறுப்பு தெரிவித்தார்.

பைத்தியம் மாதிரி பேசினால் மரியாதையாக இருக்காது என்று எச்சரித்தார். மாநில முதல்வரை குறித்து கௌரவமாக பேசவேண்டும் என்று குறிப்பிட்டார். தேர்தலில் தோற்று மக்களிடம் செருப்படி வாங்கியும் கூட வெட்கம் இல்லாமல் பேச வந்து விட்டீர்களா என்று தீவிரமாக விமர்சனம் செய்தார்.

அதற்குள் அனுராதா உங்க பாரில் 7 பேர் இறந்து விட்டார்களாம் என்று கூறவே எம்எல்ஏ மீண்டும் கோபமுற்று, “வாயை மூடு.. பைத்தியம் மாதிரி பேசாதே. பைத்தியம் மாதிரி பேசினால் உள்ள தள்ளி விடுவேன் ஜாக்கிரதை…” என்று எச்சரித்தார்.

“உன் நிலை என்ன? நீ என்ன? “என்று வெகுவாக ஆத்திரம் காட்டினார். பொம்பளைனு கூட பாக்க மாட்டேன் நாக்கை அறுத்து விடுவேன் என்று தீவிரமாக எச்சரித்தார்.

கார்ப்பரேடராக இருக்கக் கூட லாயக்கில்லாத அனுராதா முதல்வரைப் பற்றி விமர்சனம் செய்வதா? நாக்கு அறுந்து போகும்..” என்று எச்சரித்தார்.

அவர்களை விவாத நெறியாளர் சமாதானப்படுத்தியதும் விவாதம் முடிந்துபோனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe