மூன்று ‘சி’க்களைக் கண்டு பயம் வேண்டாம்: நிர்மலா சீதாராமன்!

nirmala sitaraman - 2026

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்…! வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்

வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள் உடன் அவர் ஆலோசனை நடத்தினர். இதில் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லாவும் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், வங்கிகளின் வாராக்கடன் அளவு, கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும், 2019-ம் ஆண்டில், ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருப்பதாகவும், கடன் வசூல் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ரூபே (RuPay), பீம் யுபிஐ (Bhim UPI), ஆதார் பே, டெபிட் கார்டு (DebitCard), நிப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிமாற்ற முறைகளில், வாடிக்கையாளர்களுக்கு உள்ளது போன்று, வர்த்தக நிறுவனங்களுக்கான தள்ளுபடி சலுகை ஜனவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் என்றார்.

வங்கி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் சி.பி.ஐ. தாமாக முன்வந்து வழக்கு எதையும் பதிவு செய்யாது என்று உறுதியளித்த நிர்மலா சீதாராமன், சிபிஐ., சிவிசி., சிஏஜி., (பொதுவாக 3 C என்று அழைக்கப்படும்) உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து விடுமோ என்ற அச்சத்தை வங்கி அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றார்.

இதனிடையே மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்தடுத்த மாதங்களில், வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களையும், பயிற்சிப் பட்டறைகளையும் சிபிஐ அமைப்பு நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகளாலோ, அல்லது பிற புலனாய்வு அமைப்புகளாலோ பாதிக்கப் பட்டால், வங்கி அதிகாரிகள் புகார் அளிக்க, பிரத்யேக தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories