மூன்று ‘சி’க்களைக் கண்டு பயம் வேண்டாம்: நிர்மலா சீதாராமன்!

nirmala sitaraman - 2026

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்…! வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்

வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள் உடன் அவர் ஆலோசனை நடத்தினர். இதில் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லாவும் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், வங்கிகளின் வாராக்கடன் அளவு, கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும், 2019-ம் ஆண்டில், ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருப்பதாகவும், கடன் வசூல் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ரூபே (RuPay), பீம் யுபிஐ (Bhim UPI), ஆதார் பே, டெபிட் கார்டு (DebitCard), நிப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிமாற்ற முறைகளில், வாடிக்கையாளர்களுக்கு உள்ளது போன்று, வர்த்தக நிறுவனங்களுக்கான தள்ளுபடி சலுகை ஜனவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் என்றார்.

வங்கி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் சி.பி.ஐ. தாமாக முன்வந்து வழக்கு எதையும் பதிவு செய்யாது என்று உறுதியளித்த நிர்மலா சீதாராமன், சிபிஐ., சிவிசி., சிஏஜி., (பொதுவாக 3 C என்று அழைக்கப்படும்) உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து விடுமோ என்ற அச்சத்தை வங்கி அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றார்.

இதனிடையே மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்தடுத்த மாதங்களில், வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களையும், பயிற்சிப் பட்டறைகளையும் சிபிஐ அமைப்பு நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகளாலோ, அல்லது பிற புலனாய்வு அமைப்புகளாலோ பாதிக்கப் பட்டால், வங்கி அதிகாரிகள் புகார் அளிக்க, பிரத்யேக தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories