December 6, 2025, 6:49 AM
23.8 C
Chennai

‘சினிமா பாடலாசிரியர்’ வைரமுத்துவுக்கு ‘டாக்டர்’ பட்டம்… தட்டிப் போகக் காரணம் யார்?!

chinmayee - 2025

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இன்று வழங்கப் படுவதாக இருந்த டாக்டர் பட்டம் திடீரென்று தட்டிப் போயுள்ளது. இன்று குறித்த நேரத்தில் வேறு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் பட்டத்தை வழங்குவதற்கு வருவதாகச் சொல்லியிருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வராமல் போனார். இந்நிலையில், இதற்குக் காரணம் யார் என்று ஒரு சர்ச்சையை சமூகத் தளங்களில் பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.

வைரமுத்து தன்னை மட்டுமல்லாமல் மேலும் 8 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாடகி சின்மயி டுவிட்டரில் கருத்து பதிவிட்டதும், தொடர்ந்து எழுந்த பிரச்னைகளும்தான் வைரமுத்துவுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கவிருந்த டாக்டர் பட்டம் ரத்து செய்யப்படக் காரணம் என்று ஒரு தகவலை பரவ விட்டிருக்கிறார்கள்.

பாடகி சின்மயி ஏற்கெனவே மீ டூ இயக்கத்தின் போது வைரமுத்து மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் மீண்டும் சூடு பிடித்தன. அதற்குக் காரணம், சனிக்கிழமை இன்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் வைரமுத்துவுக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கையால் டாக்டர் பட்டம் வழங்க இருப்பது தான் என்று கூறப் பட்டது. அதற்கு ஏற்ப சின்மயி, மீ டூ இயக்கத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஒரு அமைப்பையும் அதன் தலைவரையும் மத்திய அரசு அறிவித்தது. அந்தத்தலைவர் தான் ராஜ்நாத் சிங்.

01 June19 Rajnath singh - 2025

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்க, வைரமுத்து செய்த சூழ்ச்சிதான், ராஜ்நாத் சிங்கை தேர்ந்தெடுத்து தனக்கு டாக்டர் பட்டம் வழங்க வகை செய்து கொண்டது என்று கூறப் பட்டது. இதனை அடுத்து, சின்மயி அடுத்தடுத்து ட்விட்டரில் வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து அதனை ராஜ்நாத்சிங்கின் டிவிட்டர் கணக்கிற்கு பகிர்ந்தார்.

இந்நிலையில், வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ராஜ்நாத் சிங் தவிர்த்துவிட்டார். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால், இந்த நிகழ்ச்சி ரத்தானதாகக் கூறப் பட்டது.

வைரமுத்துவுக்கு கிடைக்கவிருந்த டாக்டர் பட்டத்தை ட்விட்டர் பதிவு மூலம் சின்மயி காலி செய்து விட்டதாக திரைஉலகில் தகவல் பரவிய நிலையில், இதற்குக் காரணம் சின்மயி என்பதை விட, ஹிந்து உணர்வுள்ள பாஜக., தொண்டர்கள்தான் என்று கூறுகின்றனர் சமூகத் தளங்களில்!

vairamuthu - 2025

ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்க, மத்திய அமைச்சர் வருவது, தங்களது எண்ணங்களைப் புண்படுத்தும் என்று பாஜக., தமிழக மூத்த தலைவரும் தேசிய செயலருமான ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் ராஜ்நாத் சிங்குக்கு தெரிவிக்க, அதனாலேயே ராஜ்நாத் சிங் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார் என்று கூறுகின்றனர் பாஜக.,வினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories