வன்முறைத் தலைவி..! வசமாகச் சிக்கி…! எஃப்.ஐ.ஆர்., பதிவு!

delhi jnu 1 - 2026

புதுதில்லி: ஜே.என்.யூ., மாணவர் சங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை நடப்பதற்கு முன்னதாகவே இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலை., வளாகத்தில் கடந்த ஜன., 5ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவில் முகமூடி அணிந்து தடிகளுடன் சிலர் வந்து தாக்குதல் நடத்தினர். இதில் மாணவ சங்க தலைவி ஆஷிஜோஷ் உள்ளிட்ட சிலர் காயமுற்றனர். இதனை அடுத்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதில், இடதுசாரி மாணவர் சங்கங்களும், அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினரும் மாறி, மாறி குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் மாணவ சங்க தலைவி ஆஷிஜோஷ் உள்ளிட்ட சிலர் கடந்த 4 ஆம் தேதி, அதாவது வன்முறை நடக்கும் முந்தைய நாள் பல்கலை., வளாகத்தில் உள்ள சர்வர் அறையை அடித்து சூறையாடியதுடன், காவலர்களையும் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

aishe ghose - 2026

ஜே.என்.யு வளாகத்தில் உள்ள சர்வர் அறையை சூறையாடியதற்காக ஜே.என்.யு. மாணவர் மன்ற தலைவர் ஆயிஷ் கோஷ் மற்றும் 19 பேருக்கு எதிராக தில்லி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைக்காட்சியில் ரத்தத்தில் நனைந்த முகத்துடனும், திங்களன்று ஒரு கட்டுடனும் தோன்றிய கோஷ், ஞாயிற்றுக்கிழமை ஜே.என்.யுவில் நடந்த வன்முறையில் முக்கிய பங்கு வகித்ததாக தற்போது அடையாளம் காணப் பட்டுள்ளது.

அவர் மீது ஐபிசியின் 341, 323 மற்றும் 506 பிரிவுகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தவிர, சாகேத் மூன், சதீஷ் யாதவ், சரிகா சவுத்ரி உள்ளிட்டோர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை தலைநகரை உலுக்கிய ஜே.என்.யூ வன்முறையில் போலீசார் நான்கு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்தனர். அடுத்த செமஸ்டர் பதிவு நடைமுறைகளைத் தடுத்த வகையில், ஜே.என்.யூ நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 4 ஆம் தேதி மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செமஸ்டர் சேர்க்கைப் பதிவுக்கு முயன்ற மாணவர்களை சில மாணவர்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது! அடுத்த செமஸ்டர் சேர்க்கைக்கு மாணவர்கள் பதிவு செய்வதைத் தடுத்த வகையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது எஃப்.ஐ.ஆர் கள் பதிவு செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜே.என்.யூ வன்முறையில் அடையாளம் காணப்படாத நபர்களுக்கு எதிராக, தீ வைத்ததற்காக நான்காவது எஃப்.ஐ.ஆர் ஜனவரி 6 அன்று பதிவு செய்யப்பட்டது.

Aishe Ghosh - 2026

இந்த வன்முறை சம்பவத்தை அறிந்த போலீசார் நான்காவது எஃப்.ஐ.ஆரை தேசிய தலைநகரின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் பதிவு செய்தனர்.

நான்காவது எஃப்.ஐ.ஆரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் யாதவ் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக வளாகத்திற்குள் கட்டணம் உயர்வு மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்! தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நிர்வாகத் தொகுப்பு அறைகளுக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவொரு மாணவரையும் எதிர்ப்பு தெரிவிக்க அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது! எனவே அங்கு போலீஸார் நிரந்தரமாக நிறுத்தப்பட்டனர். ”

மாலை 3.34க்கு சில மாணவர்கள் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர் .பெரியார் விடுதிக்கு வெளியே பொது சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள் என்பதை போலீஸார் அறிந்தார்கள்.

“நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம், அடையாளம் தெரியாத 40 முதல் 50 பேர், அவர்களில் சிலர் கைக்குட்டை மற்றும் முகமூடிகளால் முகங்களை மூடிக்கொண்டு, குச்சிகள் மற்றும் தடிகளை ஏந்தியிருந்தனர். அவர்கள், விடுதிக்கு உள்ளேயும் வெளியேயும் மற்ற மாணவர்களை அடிப்பதைக் கண்டோம்” என்று யாதவ் எஃப்.ஐ.ஆரில் தெரிவித்தார்.

அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்துவதாகவும், மாணவர்களை அடிப்பதாகவும் போலீசாரிடம் கூறினர். போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமைதியைக் காக்கச் சொன்னார்கள் என்று யாதவ் எஃப் ஐ ஆரில் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் அந்தப் பகுதியை அடைந்தவுடன், இந்த அடையாளம் தெரியாத நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்” என்று யாதவ் தெரிவித்துள்ளார்.

வளாகத்திற்குள் நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதி வளாகத்திற்குள் நுழைய காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளித்தது.

ஜே.என்.யூ அதிகாரிகளிடமிருந்து கோரிக்கைக் கடிதத்தைப் பெற்ற பிறகு, வளாகத்திற்குள் வன்முறை நிலைமையை சீராக்க மேலும் போலீஸார் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. “நாங்கள் மாணவர்களை அமைதியைக் காக்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வளாகத்தில் இருந்து மாணவர்களிடமிருந்து துயர அழைப்புகள் வரத் தொடங்கின.

“இரவு 7 மணியளவில், அடையாளம் தெரியாத 40 முதல் 50 பேர் சபர்மதி விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை அடித்து சொத்துக்களை சேதப்படுத்தத் தொடங்கினர் என்பதை நாங்கள் அறிந்தோம்” என்று எஃப்.ஐ.ஆர்.இல் குறிப்பிடப் பட்டுள்ளது.

காவலர் குழுக்கள் உடனடியாக அந்த இடத்தை அடைந்து, சுமார் 40 முதல் 40 மாணவர்கள் கொண்ட கும்பல், ஹாஸ்டலின் சொத்துக்களை சேதப்படுத்துவதைக் கண்டறிந்தனர். “நாங்கள் அமைதியைப் பேணுவதற்கும், வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதற்கும் உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கும் அறிவிப்பு செய்தோம். குண்டர்கள் தொடர்ந்து சொத்துக்களை சேதப்படுத்தினர், ஆனால் நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், ”என்று யாதவ் எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு காயமடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு எய்ம்ஸ் மையம், எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக எஃப்.ஐ.ஆர்.இல் குறிப்பிடப் பட்டுள்ளது.

“கட்டுப்பாடற்ற கும்பல் சொத்துக்களை சேதப்படுத்தியது, பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியது” என்று எஃப்.ஐ.ஆர். கூறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories