66 பேர் பயணித்த வங்கதேச படகு… அந்தமானில் நிறுத்திய அதிகாரிகள்!

Published:

IMG 20200114 WA0018 - 2026

அறுபத்தாறு பேர் பயணித்த பங்களாதேஷ் படகை அந்தமானில் நிறுத்தி வைத்த இந்திய அதிகாரிகள்.

பங்களாதேஷிலிருந்து வந்த படகினை ‘சென்டினலீஸ்’ இனத்தவர் வசிக்கும் தீவிற்கு அருகில் இந்திய அதிகாரிகள் நிறுத்திவைத்தார்கள்.

அந்தப் படகில் 66 பேர் சந்தேகத்திற்கு இடமான ரோஹிங்காக்கள் இருப்பதாக அந்தமான் நிக்கோபார் போலீசார் தெரிவித்தனர். இந்தப் படகை துர்மக்ளி தீவின் அருகில் நிறுத்தியதாக கூறினார்கள்.

இந்தப் பகுதி வடக்கு சென்டினல் தீவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சந்தேகத்திற்கிடமான ரோஹிங்காக்களோடு வந்த அந்த படகு சுமார் 15 நாட்களுக்கு முன் பங்களாதேஷில் இருந்து கிளம்பிய தாகத் தெரிகிறது.

இந்த மாதம் 13ம் தேதி இந்த படகு பற்றி போர்ட்ப்ளேர் போலீஸ் அதிகாரிகளுக்கு செய்தி வந்தது.

துர்மக்ளி தீவின் சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான படகு வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இந்த சந்தேகத்திற்கிடமான படகை அடையாளம் காண்பதற்காக உடனுக்குடன் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். இறுதியில் மாலை இந்தப் படகை கண்டறிந்து அதில் பயணித்த 66 பேரையும் சிறைபிடித்தனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இவர்களுள் 24 பேர் ஆண்கள் 27 பேர் பெண்கள் 15 குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img