நீதிமன்ற உத்தரவு: கேரளத்தில் 300 பார்கள் மூடல்

Published:

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் உள்ள 300 மதுபான பார்கள் இன்று மூடப்பட்டன. கேரளத்தில் முதல்வர் உம்மன்சாண்டி புதிய மதுக் கொள்கையை அறிவித்தார். இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பாபுமாத்து, பி.ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2014–15 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசின் மதுகொள்கைக்கு அனுமதி அளிப்பது எனவும், மாநிலத்தில் உள்ள 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட 24 பார்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், 300 மது பான பார்களை உடனடியாக மூடவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்ப்ப்பளிக்கப்பட்டிருந்ததால், மாநிலம் முழுவதும் 300 பார்கள் உடனடியாக மூடப்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவில், 5 நட்சத்திர ஓட்டல் பார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Related articles

Recent articles

spot_img