காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் காலமானார்

Published:

மும்பை: காங்கிரஸ் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.ஆர்.பாட்டீல், தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார். அப்பாசாஹேப் என்று அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் எஸ்.ஆர்.பாட்டீல். மேற்கு மகாராஷ்ட்ரத்தின் கோல்ஹாப்பூரில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர். சர்க்கரை ஆலைகளுக்காகவும், கூட்டுறவுத் துறையிலும் மாநிலத்தில் பல்வேறு பணிகளைச் செய்தவர். மகாராஷ்டிரத்தின் சட்டமன்றத்தில் மிக மூத்த உறுப்பினராகத் திகழ்ந்தவர். அண்மையில் நடந்த தேர்தலின்போது, சிவசேனாவின் உல்ஹாஸ் படேலிடம் ஷிரோல் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார். அவருடைய மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஷோக் சவான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img