பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!

Published:

IMG 20200124 WA0064 - 2026

தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த இரு ஆண்டுகளாக பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

IMG 20200124 WA0067 - 2026

இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், சந்தேகங்களைக் குறித்து கேட்டு அறிந்துகொள்கிறார்.

இந்த ஆண்டு பரீட்சா பே சர்ச்சா நிகழ்ச்சி டெல்லி யில் தால்கோட்ரா ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் டீம் இந்தியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், முன்னாள் கோச் அனில் கும்பளே தொடர்பான ஒரு சம்பவம் குறித்து குறிப்பிட்டார் பிரதமர்.

IMG 20200124 WA0064 - 2026

2002ல் டீம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கு சென்றபோது ஒரு மேட்சில் அனில்கும்பளே தீவிரமாக காயமடைந்தார். அதனால் அவர் பௌலிங் செய்வாரா என்று அனைவரும் சந்தேகித்தனர். ஆனால் காயத்தை பொருட்படுத்தாமல் தலைக்கு பேண்டேஜ் கட்டிக்கொண்டு பௌலிங் செய்தார் கும்பளே. அதோடு வெஸ்ட் இண்டீஸ் ஹீரோவான பிரைன் லாராவின் விக்கெட்டை வீழ்த்தி மேட்சை திசை மாற்றினார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?
IMG 20200124 WA0066 - 2026

இந்த செய்தியை மோடி மாணவர்களிடம் குறிப்பிட்டார்.

அதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்தார் கும்பளே. அந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்து மாணவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் கூறினார் கும்பளே.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img