ஆகம மீறல்… அபசாரம்..! திருப்பதி திருமலை ஆலயத்தின் மேல் சுற்றிய விமானத்தால் சர்ச்சை!

Published:

tirupathi flight - 2026
கோப்பு படம்:

திருமலை ஆலயத்தின்மீது சுற்றி வருகின்ற விமானத்தைக் கண்டு, அபசாரம்…! அபசாரம்…! என்று கூக்குரலிடுகிறார்கள் பக்தர்கள்.

திருமலை மீது பறந்த விமானம் பரபரப்பு ஏற்படுத்தியது. மத்திய அரசுக்குச் சொந்தமான சர்வே ஆஃப் இந்தியா விமானம் இரண்டு நாட்களாக திருமலை மீது சுற்றி வருகிறது. இதற்கு முன்பே திருமலை மீது நோ ஃபிளையிங் ஜோனாக (விமானங்கள் பறக்க தடை செய்யப் பட்ட பகுதியாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றி வரும் விமானம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்று தெரியாமல் திருமலை அதிகாரிகள் கலவரத்துக்கு உட்பட்டார்கள். என்ன நடக்கிறது என்று தெரியாமல் சென்னை ஏர் டிராபிக் கண்ட்ரோலருக்கு செய்தி தெரிவித்தார்கள்.

tirupathi therottam - 2026

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விமானங்களின் மூலம் நாட்டு பூகோள சூழ்நிலைகளை சர்வே ஆஃப் இண்டியா சர்வே செய்வது வழக்கம். ஆனால் வைகானச ஆகம சாஸ்திரத்தின்படி ஸ்ரீவாரி விமான வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு மேலாக விமானங்கள் பறக்கக் கூடாது என்ற நியமம் உள்ளது.

இதுகுறித்து இதற்கு முன்பே ஏவியேஷன் ஆஃப் இந்தியாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது. திருமலை மீது விமானங்கள் சுற்றக் கூடாது என்று ஏற்கனவே ஆந்திர அரசாங்கம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. திருமலை மீது இந்த இடங்களில் தேவதைகள் சஞ்சாரம் செய்து வருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img