பிரியங்காவின் ஓர் ஓவியம்.. விலை ரூ.2 கோடி! யெஸ் பேங்க் திவாலான ரகசியம்!

priyanka gandhi yes bank - 2026

யெஸ் வங்கி நிதி முறைகேட்டில் அதன் நிறுவுனர் ராணா கபூர், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியின் ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய தகவல் இன்று வெளியான நிலையில் அது குறித்த பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்திக்கும் வர்த்தக தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டதாம்! அப்போது பிரியங்கா காந்திக்கும் ரானா கபூருக்கும் நெருங்கிய வர்த்தக தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

ராணா கபூர் பிரியங்கா காந்தி வரைந்த ஏதோ ஓர் ஓவியத்தை இரண்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது! முன்னதாக 30 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ராணா கபூர். அதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். டிஹெச்எப்எல் நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பாக அவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று கூறப்பட்டிருந்தது

இதுதொடர்பாக அவரது வீடுகளில் இரு நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் ஓவியத்தை இரண்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, நிதி மோசடி செய்துள்ளதாக தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இதுபோல்தான் மம்தா பானர்ஜியின் ஓவியங்களை பல கோடிக்கு வாங்கி சாரதா சிட்பண்ட் ஊழலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது!

மேலும் எஸ் வங்கி எந்தவித அனுமதியும் இல்லாமல் தன்னிச்சையாக கிரிக்கெட் வீரர்கள் சிக்சர் அடித்தால் ஒரு லட்சம் கேட்ச் பிடித்தால் ஒரு லட்சம் என்றெல்லாம் பரிசுகளை கிரிக்கெட் போட்டிகளின்போது அள்ளி விட்டதும் இப்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது!

வங்கி வாராக்கடன்களால் மட்டும் நெருக்கடிக்கு உள்ளாகவில்லை இதுபோன்ற முறைகேடான நிதி விடுவிப்புகளாலும் ஊதாரித்தனத்தாலுமே நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்கின்றனர் சமூகத் தளங்களில்!

காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய ஓவியர்களெல்லாம் இருப்பாங்கபோல.! அன்று ஏ.கே.அந்தோனியின் மனைவி வரைந்த ஓவியத்தை ஏர்இந்தியா பல கோடி கொடுத்து வாங்கியது. இன்று பிரியங்கா காந்தி வரைந்த ஓவியத்தை எஸ்பேங்க் இரண்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய விசயம் வெளியில் வந்திருக்கிறது.
உண்மையாகவே கலையையும் கலைஞர்களையும் வாழ வைக்கும் கட்சி காங்கிரஸ்தான்.என்று கிண்டல் செய்து வருகின்றனர் சமூகத் தளங்களில்.

அதே போல், இந்தியாவில் நடைபெறும் அனைத்து நிதி முறைகேடுகளிலும் காங்கிரஸ் கட்சியும் குறிப்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சம்பந்தப் பட்டிருப்பார்கள்… இதிலும் கூடத்தான் என்று கருத்துகள் பரவலாக எழுந்து வருகிறது.

Vijayakumar Arunagiri:
தலையில் அடிக்கிற பெயிண்டங்கை போர்டி ல் அடித்ததற்கே 2 கோடி ரூபாயை எஸ் பேங் சேர்மன் பிரியங்கா வதேராவுக்கு கொடுத்து
ள்ளார் என்றால் இவர்கள் கை காட்டும் ஆட்க ளுக்கு பேங்கில் இருந்து எவ்வளவு கோடி களை கொடுத்து இருப்பார்கள்?.

Vasanthan Perumal:
YES வங்கியை தோற்றுவித்த ராணா கபூர் பிரியங்கா காந்தி வரைந்த ஓவியத்தை 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்.
………… TIMES NOW செய்தி!
ஓவியர் கலைஞர் பிரியங்கா காந்தி ????

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories