தில்லியில் கலவரம் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; தண்டனை நிச்சயம்: அமித் ஷா!

amitsha - 2026

தில்லி கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர், தில்லி கலவரம் வெறும் 36 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்த அவர், பிப்ரவரி 25க்குப் பிறகு கலவரங்கள் ஏதும் நிகழவில்லை என்றும், இதனை பெரும் அரசியலாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். தில்லியின் பிற பகுதிகளுக்கு கலவரம் பரவாமல் தடுத்ததாக போலீசாரை பாராட்டினார்.

தில்லி கலவரம் தொடர்பாக 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 153 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். முதற்கட்ட விசாரணையில் கலவரம் திட்டமிட்டுத் தூண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், வன்முறைகளுக்கு நிதியுதவி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

வெறுப்புப் பிரசாரத்தைத் தூண்டுவதற்காக பிப்ரவரி 22 ஆம் தேதி 60 சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதியே அவை டெலிட் செய்யப் பட்டுள்ளதாகக் கூறினார். இருப்பினும், இவ்வாறு போலியான சமூகத் தளப் பக்கங்கள் தொடங்கியவர்கள், இதில் தொடர்பு கொண்டவர்கள் ஒருபோதும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்றார்.

அவர் மேலும் தெரிவித்தவை…

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

தில்லி கலவரத்தில் 1100 தூண்டிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கலவரக்காரர்களை அடையாளம் காண முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் கண்டுள்ளோம்.

இவர்களில் பலர் உ.பி.யின் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் கலவரக்காரர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட, 40 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

யாரும் எளிதில் தப்பிக்க முடியாது. (அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி…)

இந்த கலவரங்களுக்கு வழிவகுத்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவர்.

சிஏஏ.,வைக் கடந்து செல்ல நாங்கள் நாடாளுமன்றத்தின் கதவுகளையோ தாழ்வாரங்களையோ மூடவில்லை

நாங்கள் அனைத்தையும் நாடாளுமன்ற நடைமுறைகளை நிறைவேற்றி அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் கொடுத்துள்ளோம்.

சிஏஏ.,வின் கீழ் எவரது குடியுரிமையையும் பறிக்க எந்த ஏற்பாடும் இல்லை. ஆனால் சிஏஏ குறித்து எவ்வளவு தவறான தகவல்கள் பரப்பப்பட்டன?

சிஏஏ ஆதரவாளர்களால் வன்முறை மூண்டதாக கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். குறிப்பாக, பெரும்பாலான சிஏஏ ஆதரவாளர்கள் பிப்.24ம் தேதிக்கு முன்பே தெருவில் வெளியே இறங்கிவிட்டார்கள் என்று கூறினர்…

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இதெல்லாம் வெறுக்கத்தக்க பேச்சு இல்லையா என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories