மும்பை டூ ஹைதராபாத்… தீயில் எரிந்து நாசமான பஸ்!

bus fire - 2026

மும்பை டு ஹைதராபாத். தீயில் எரிந்து சாம்பலான ஆரஞ்சு பஸ். கணத்தில் தப்பிய பாலம் போன்ற விபத்து. கோரமான தீவிபத்து கணத்தில் தப்பியது.

ஒன்றிணைந்திருந்த ஆந்திரப் பிரதேசத்தில் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பாலம் அருகில் தேசிய நெடுஞ்சாலை மீது நடந்த சம்பவத்தை நினைவிற்கு கொண்டு வருவது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 2013 ல் நடந்த பாலெம் பஸ் தீ விபத்தில் 45 பயணிகள் எரிந்து சாம்பலாயினர். ஏழு பேர்பலத்த காயமடைந்தனர்.

நேற்று டிரைவர் சரியான தருணத்தில் உடனடியாக செயல்பட்டதால் பெரும் விபத்து கணநேரத்தில் தப்பியது.

தெலங்காணாவில் உள்ள சங்காரெடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆரஞ்சு டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மல்டி ஆக்சில் பஸ்ஸில் தீப்பிடித்தது ஒரே நிமிடத்தில் பஸ் முழுவதும் விழுங்கி கபளீகரம் செய்து சாம்பலாக்கி விட்டது.

பெட்ரோல் பங்க் எதிரில் இந்த சம்பவம் நடந்தது அச்சத்தை ஊட்டியது. சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திராபுரம் அருகில் தேசிய நெடுஞ்சாலை மீது வெள்ளிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நேர்ந்தது. வியாழக்கிழமை மாலை மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு கிளம்பிய இந்த பஸ் ராமச்சந்திராபுரம் அருகில் வந்தவுடன் தீ விபத்துக்குள்ளானது.

பஸ்சில் தீ பற்றி எரிந்தது. நெருப்பு ஒரே கணத்தில் பஸ் முழுவதிலும் பரவியது. விபத்து நேர்ந்தபோது பஸ்ஸில் 26 பேர் பயணிகள் இருந்தனர். முதலில் இன்ஜினில் இருந்து அடர்த்தியான புகை வெளிவந்ததால் டிரைவர் எச்சரிக்கை அடைந்தார் . உடனே பயணிகளை கீழே இறக்கி விட்டார். உடனுக்குடன் பகீரென்று பஸ் பற்றி எரிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே பஸ் முழுவதும் பரவியது. பிரயாணிகள் தம் லக்கேஜுகளை கீழே இறக்குவதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது.

நெருப்பு எத்தனை வேகமாக பரவியது என்பதை நாம் உணர முடியும். பயணிகள் கட்டிய துணியோடு நடுரோட்டில் நின்றார்கள். தேசிய நெடுஞ்சாலை மீது பெட்ரோல் பங்க் எதிரில் இந்த மிகப் பெரும் தீ விபத்து நடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து சேர்வதற்குள் பஸ் முழுவதும் எரிந்து போய் விட்டது. செய்தி அறிந்த ராமச்சந்திராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். தீயணைப்பு படையினரை அழைத்தார்கள்.

ஷார்ட் சர்க்யூட் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கும் என்று முதல் தகவல் தீர்மானித்தார்கள். மும்பையில் கிளம்பிய பஸ் எங்குமே நிற்காமல் பயணித்ததால் இன்ஜின் சூடாகி இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories