ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல்; கவுன்சிலர் சையத் ஜஹீர் கைது!

Published:

ahsa attack muslim councilar - 2026

தெலங்காணாவில் ஆஷா ஹெல்த் ஊழியர்கள் மேல் தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன. அண்மையில் அதிலாபாத் மாவட்டத்தில் ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் மறப்பதற்கு முன்பே இன்று நிர்மல் மாவட்டத்தில் ஆஷா ஊழியர்கள் மீது ஒரு முஸ்லிம் கவுன்சிலர் தாக்குதலில் இறங்கினார்.

நிர்மல் மாவட்டத்தில் மர்கஜ் சென்று வந்தவர்களின் விவரங்களை சேகரிப்பதற்காக சென்று சர்வே நடத்தி வரும் ஆஷா ஊழியர்களை கபூதர் கமான் என்ற ஏரியாவின் கவுன்சிலர் தடுத்து, “நாங்கள் எப்படிப்பட்ட விவரங்களையும் கொடுக்க மாட்டோம். இங்கிருந்து போய் விடுங்கள்” என்று மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி தன் அதிகார பலத்தையும் காட்டும் முயற்சியில் இறங்கினார். அவருடைய நடவடிக்கையை பார்த்து ஆஷா ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தார்கள். அதனால் உடனே அங்கு வந்த போலீசார் அந்த முஸ்லிம் கவுன்சிலரை கைது செய்தனர்.

ஆனால் ஏஎன்எம் களும் ஆஷா ஊழியர்களும் தமக்கு பாதுகாப்பு அளித்தால் தான் தங்களால் பணி செய்ய முடியும் என்று மாவட்ட மையத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் இறங்கினார்கள்.

நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் நகர், கபூதர் கமான் காலனியில் ஆஷா ஊழியர்கள் மீது தாக்குதலில் இறங்கியதால் தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சர்வேக்கு போக மாட்டோம் என்றும் ஆஷா ஊழியர்கள் கூறினார்கள் .

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அந்த முஸ்லிம் கவுன்சிலரின் நடவடிக்கை மீது தீவிர அதிருப்தி வெளிப்படுத்தினார்கள். இந்த கவுன்சிலர் நடந்துகொண்ட விதத்தை விவரித்து அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

நிர்மல் மாவட்டத்தில் இருந்து சுமார் 52 பேர் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மதப் பிரச்சார சபையில் பங்கு கொண்டு திரும்பினார்கள். இரண்டு நாட்கள் முன்பு அவர்களில் ஒருவர் இறந்து போனார்.

ஆனால் அந்த ஏரியாவில் சர்வே நடத்துவதற்காக சென்றபோது உள்ளூர் கவுன்சிலர் அவர்களை தடுத்து தாக்கத் தொடங்கினார் என்று தெரிவித்தார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img