கொரோனா தாக்கம்… ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு..!

coronavirus 1

உலகில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் கடந்த 24 மணி நேரத்தில், 1,03,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 6,069 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,96,986 ஆகவும், மொத்த பாதிப்பு 28,27,047 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 7,98,295 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,863 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 52,097 ஆக உயர்ந்தது. புதிதாக 37,370 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 9,23,812 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,10,400 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் 24,506 பேருக்கு கொரோனா வைரஸ் கிருமி தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 775 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவுவதற்கு முன்னதாகவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், முன்னதாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தியும் கூட, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,506ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்தியாவில் உயிரிழப்பு 775ஆக அதிகரித்துள்ளது.

1,429 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாக உறுதிசெய்யப் பட்டது. இருப்பினும், நேற்று 314 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,062ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று மாலை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 114 பேர் குணமடைந்தனர்.

தமிழகத்தில் மேலும் 72பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories