April 28, 2025, 1:41 PM
32.9 C
Chennai

ஊரடங்கில் உணவு பரிமாற்றம்.. காதலும் வந்து கல்யாணமும் முடிந்தது!

neelam

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு உணவு கொடுக்கச் சென்றபோது யாசகம் கேட்கும் பெண் மீது காதல் கொண்ட இளைஞர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் லலித் பிரசாத். இவரிடம் டிரைவராக இருப்பவர் அனில். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தெருவோரங்களில் வசிப்பவர்கள் அவதிப்படுவதை அறிந்த லலித் பிரசாத் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் பணியை தொடங்கினார்.

neelam

கான்பூர் நகரில் பல்வேறு தெருக்களுக்கும் அவர் தனது டிரைவர் அனிலுடன் சென்று உணவு வழங்கி வந்தார். அப்போது டிரைவர் அனிலும் உணவு பொட்டலங்களை எடுத்துச் சென்று கொடுப்பது உண்டு.

தினமும் அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் உணவு வழங்கும்போது ஒரு இளம்பெண் தனது தாயுடன் உணவு வாங்குவதை அனில் கண்டார்.. அப்போது அந்தபெண்ணுக்கும் டிரைவர் அனிலுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் நிலை குறித்து அனில் விசாரித்தார்.

அதற்கு அவர் தனது பெயர் நீலம் என்றும் தனது தந்தை இறந்துவிட்டார். தாய் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் சகோதரர் தன்னையும் தாயையும் வீட்டை விட்டு விரட்டி விட்டார் என்றும் வீட்டை விட்டு வெளியேறிய தனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

ALSO READ:  IPL 2025: பட்லர் அடிச்ச அடி... பராக்கு பாத்த டெல்லி அணி!
neelam

அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கதையை கேட்டு அனில் மனம்வருந்தினார். பின்னர் அந்த பெண்ணை அனில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து தனது முடிவை முதலாளியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அனில்- நீலம் இருவருக்கும் நேற்றைய தினம் திருமணம் செய்து வைத்தார் லலித் பிரசாத். இதுகுறித்து நீலம் கூறுகையில் கடவுள் என்னை சோதித்ததாக தினமும் அழுவேன். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்தேன். ஆனால் கடவுள் என்னை கைவிடவில்லை. 7 ஜென்மத்திற்கு இவரே எனக்கு கணவனாக வர வேண்டும் என்றார்.

neelam

இந்த திருமணத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. மணமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். இவர்களது திருமணம் குறித்து லலித் பிரசாத் கூறுகையில் நீலமை திருமணம் செய்து கொள்ள அனில் விரும்புவதை அவரது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தோம் என்றார்.

ALSO READ:  கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories