ஊரடங்கில் உணவு பரிமாற்றம்.. காதலும் வந்து கல்யாணமும் முடிந்தது!

neelam

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் ஊரடங்கால் பாதித்தவர்களுக்கு உணவு கொடுக்கச் சென்றபோது யாசகம் கேட்கும் பெண் மீது காதல் கொண்ட இளைஞர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் லலித் பிரசாத். இவரிடம் டிரைவராக இருப்பவர் அனில். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தெருவோரங்களில் வசிப்பவர்கள் அவதிப்படுவதை அறிந்த லலித் பிரசாத் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் பணியை தொடங்கினார்.

neelam

கான்பூர் நகரில் பல்வேறு தெருக்களுக்கும் அவர் தனது டிரைவர் அனிலுடன் சென்று உணவு வழங்கி வந்தார். அப்போது டிரைவர் அனிலும் உணவு பொட்டலங்களை எடுத்துச் சென்று கொடுப்பது உண்டு.

தினமும் அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் உணவு வழங்கும்போது ஒரு இளம்பெண் தனது தாயுடன் உணவு வாங்குவதை அனில் கண்டார்.. அப்போது அந்தபெண்ணுக்கும் டிரைவர் அனிலுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் நிலை குறித்து அனில் விசாரித்தார்.

அதற்கு அவர் தனது பெயர் நீலம் என்றும் தனது தந்தை இறந்துவிட்டார். தாய் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் சகோதரர் தன்னையும் தாயையும் வீட்டை விட்டு விரட்டி விட்டார் என்றும் வீட்டை விட்டு வெளியேறிய தனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

neelam

அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கதையை கேட்டு அனில் மனம்வருந்தினார். பின்னர் அந்த பெண்ணை அனில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து தனது முடிவை முதலாளியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அனில்- நீலம் இருவருக்கும் நேற்றைய தினம் திருமணம் செய்து வைத்தார் லலித் பிரசாத். இதுகுறித்து நீலம் கூறுகையில் கடவுள் என்னை சோதித்ததாக தினமும் அழுவேன். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்தேன். ஆனால் கடவுள் என்னை கைவிடவில்லை. 7 ஜென்மத்திற்கு இவரே எனக்கு கணவனாக வர வேண்டும் என்றார்.

neelam

இந்த திருமணத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. மணமக்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். இவர்களது திருமணம் குறித்து லலித் பிரசாத் கூறுகையில் நீலமை திருமணம் செய்து கொள்ள அனில் விரும்புவதை அவரது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories