December 6, 2025, 9:36 AM
26.8 C
Chennai

கொல்லத்தில் சுவாரஸ்யம்: கணவரிடம் இருந்து ஆணையர் பொறுப்பைப் பெற்ற ஐபிஎஸ் மனைவி!

kollam ips ajeetha takes charge

கொல்லம் :

கொல்லம் நகர காவல் துறை ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்ட அஜீதா பேகம் ஐபிஎஸ்., அப்பதவி வகித்து வந்த அவரது கணவர் சதீஷ் பினோவிடம் இருந்து பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அஜீதா பேகமும், கன்னியாகுமரியைச் சேர்ந்த சதீஷும் 2008-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள். இருவரும் ஜம்மு- காஷ்மீர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணியில் இருந்தனர். பின்னர், இருவருக்கும் திருமணம் ஆனது. இதைத் தொடர்ந்து 2011-இல் கொல்லத்துக்கு பணி மாறுதல் பெற்று வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கொல்லம் (ஊரகம்) வருவாய் மாவட்ட எஸ்.பி.யாக அஜீதா பணி புரிந்து வந்தார். அந்த மாவட்டத்தின் நகர்ப்புற எஸ்.பி.யாக சதீஷ் பினோ இருந்து வந்தார். இந்நிலையில் அஜீதா கரு தரித்ததால், மகப்பேறு விடுமுறையில் சென்றார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அஜீதாவின் விடுப்பைத் தொடர்ந்து எஸ்.பி.யாக இருந்த சதீஷ் பினோ, கொல்லம் நகர காவல் துறை ஆணையராக பதவியேற்றார். மகப்பேறு விடுமுறை முடிந்து அஜீதா பணியில் சேர்ந்தபோது, அவரது கணவர் சதீஷ் வகித்து வந்த கொல்லம் நகர காவல் துறை ஆணையராக மாற்றப்பட்டார். அப்பணியில் இருந்து வந்த சதீஷ், பத்தினம்திட்டா மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

இதனால், கொல்லம் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அஜீதா, தனது கணவர் சதீஷிடம் இருந்து ஆணையர் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மனைவியின் வளர்ச்சிக்கு கணவர் ஊக்குவிப்பதாக பலரும் பாராட்டினர்.

இது குறித்து அவர்களிடம் பேசிய அஜீதா, போதைப் பொருளை ஒழித்து, கொல்லத்தை பாதுகாப்போம் என்ற விழிப்பு உணர்வு பிரசாரத்தை கொல்லம் ஆணையராக இருந்த சதீஷ் தொடங்கியிருந்தார். அதை நானும் தொடர்ந்து செயல்படுத்துவேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கொல்லம் நகரில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று அஜீதா தெரிவித்தார்.

/ajeetha-ips-succeeds-husband-as-kollam-top-cop

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories