கத்திச் சண்டை போட்ட… கல்லூரி மாணவர்கள்! காரணம் தெரியுமா?!

Published:

students vijayawada
students vijayawada

விஜயவாடாவில் கத்திச் சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள்! விஜயவாடாவில் கல்லூரி மாணவர்கள் ரவுடிகளை போல் நடந்து கொண்டார்கள். நடுரோட்டில் நீண்ட கத்திகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள்.

இரு மாணவர் குழுவினருக்கு நடுவில் ஏற்பட்ட விவாதம் கத்தி கம்பு, கற்களால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் வரை நீண்டது. இதனால் விஜயவாடா மக்கள் பரபரப்புக்கும் அச்சத்திற்கும் ஆளானார்கள்.

இந்த சண்டையில் அடிபட்ட மாணவர்களை விஜயவாடாவில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த கேங்க் வாரில் அரசியல் கட்சித் தலைவர்களின் அடியாட்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாணவர்களின் குழுச் சண்டைக்கு எனமலகுருதுரு என்ற இடத்தில் உள்ள ரூபாய் 2 கோடி மதிப்புள்ள நிலமே காரணம் என்று தெரிகிறது. லேண்ட் டீல் தொடர்பாக இரண்டு குழுக்களும் விவாதத்தில் ஈடுபட்டதால் அது சண்டையாகமாறி உள்ளது.

students vijayawada
students vijayawada

இந்த பின்னணியில் இரு குழுக்களையும் சேர்ந்த 30 பேருக்கும் மேலாக கல்லூரி மாணவர்கள் கத்திகள் கம்புகள் கற்ளை எடுத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள். இதனால் பலர் காயமடைந்தார்கள். அவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இந்த விவாதத்தில் முன்னாள் ரௌடி ஷீட்டரின் தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் அடியாட்களின் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருவதால் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img