சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு!

Published:

chandra babu naidu e1565862389210

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது நந்திகாமா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவாகி உள்ளது. அவர் லாக்டௌன் நிபந்தனைகளை கடைபிடிக்கவில்லை என்று புகார் வந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு பல இடங்களில் லாக்டௌன் நிபந்தனைகளை மீறினார்.

மிகப்பெரிய கான்வாயோடு ஆந்திரப் பிரதேசத்தில் நுழைந்து சந்திரபாபு லாக்டௌன் நிபந்தனைகளுக்கு எதிராக ஜக்கைய்யாபேட்ட, கன்சிகர்ல போன்ற இடங்களில் மக்கள் கூட்டத்திற்கு காரணமானார் என்று வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனால் சந்திரபாபு நாயுடு மீது ஐபிசி செக்சன் 188 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

பிரத்தியேக அனுமதியோடு மே 25ஆம் தேதி ஏபியில் நுழைந்த சந்திரபாபு, வரும் வழியில் பல இடங்களில் மக்கள் கூட்டம் சேர்த்துள்ளார். பைக் ராலி நடத்தி லாக்டௌன் நிபந்தனைகளை மீறினார் என்று மிகப்பெரும் அளவில் விமர்சனங்கள் வந்தன. சந்திரபாபு மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவாகியுள்ளது.

மறுபுறம் விசாகப்பட்டினம் செல்லப்போவதாக ஆந்திர பிரதேஷ் டிஜிபியிடம் அனுமதி கேட்டிருந்த சந்திரபாபு மகாநாடு முடித்த உடனேயே திரும்ப ஐதராபாத்துக்கு சென்று விட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சந்திரபாபுவுக்கு விஜயவாடாவில் கிடைத்த வரவேற்பைக் கண்டு பொறாமையால் இவ்வாறு புகார் அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img