April 28, 2025, 3:24 PM
32.9 C
Chennai

லடாக் எல்லையில் ராணுவம்…! போலியான வீடியோக்களை பகிராதீர்கள்: எச்சரிக்கை!

army tank china
army tank china

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வெற்றிச் செய்தி, என்று குறிப்பிட்டு ஒரு தகவல் உலா வருகிறது.

அதில், “வெற்றிச்செய்தி! இந்திய எல்லையினுள் நுழைய முயன்ற சீன இராணுவ வீரர்களை அடித்து விரட்டியதோடு மட்டுமில்லாமல் ஒரு சீன இராணுவ வீரரையும் சிறை பிடித்துள்ளது இந்திய இராணுவம்.. மேலும் Norinco VN21 LAV என்ற சீனாவின் இராணுவ வாகனத்தையும் இந்தியா கைப்பற்றி உள்ளது.. எவென்டா சொன்னது இந்தியா சீனாவை தாக்காது என்று..இந்தியாவை இழிவு செய்து பேசிய பாகிஸ்தான் சொம்புகள் பார்க்கிற வரை இந்த வீடியோவை share பண்ணுங்க.. வெற்றி நமதே.. – என்று குறிப்பிட்டு, ஒரு ராணுவ டாங்க் ஒன்று பின்னோக்கிச் செல்வது போன்றும், ஒரு சீன ராணுவ வீரரை இந்திய ராணுவ வீரர்கள் மடக்கிப் பிடித்திருப்பது போலும் சித்திரித்து அந்த வீடியோ பகிரப் பட்டு வருகிறது.

ஆனால் அந்த வீடியோவில், போலீஸ் என்ற தடுப்பு பயன்படுத்திக் கொண்டு, வீரர்கள் நிற்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில், இது போன்ற போலி வீடியோக்கள் வந்தால், அவற்றைப் பகிராதீர்கள் என்று இந்திய ராணுவம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்த வீடியோவுக்கு இந்திய ராணுவம் நேற்று அளித்த விளக்கத்தில்… சமூக வலைதளங்களில் பரவும் அந்த வீடியோ, உண்மையானது இல்லை. வடக்கு எல்லை பிரச்னையுடன் இந்த வீடியோவை இணைக்க முயற்சி செய்வது தவறானது. இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைச் சரிசெய்ய, ராணுவ தளபதிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது லடாக் பகுதியில் எந்த மோதலும் நடைபெறவில்லை. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இது போன்ற முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் இது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லை அருகே அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மே 5ஆம் தேதி லடாக்கில் உள்ள பாங்கோங் சோ எல்லையோரம் 250க்கும் மேற்பட்ட இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்ததாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

ALSO READ:  IPL 2025: பந்து வீச்சாளர்களுக்கு வலு சேர்த்த போட்டி!

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் சோ, கால்வன் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் தவுலத் பெக் ஓல்டி பகுதிகளில் மூன்று வாரத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. அதில் பாங்கோங் சோ பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதுகுறித்துதான் இந்திய ராணுவம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. குறிப்பாக, டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பாகிஸ்தான் தொடர்புடைய ‘மர்ம’ நபர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்காக வேலை செய்யும் ‘மர்ம’ நபர்கள் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலையை சீர்குலைக்க இது போன்ற போலி வீடியோக்களை வெளியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்றும், மக்கள் இவற்றை இனம் கண்டு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories