தெலங்காணா மாநிலம் உருவான தினம்! களை கட்டிய கொண்டாட்டம்! வாழ்த்திய மோடி!

Published:

modi speech - 2026

தெலங்காணா மாநில அவதார தினம் இன்று! இதை முன்னிட்டு, இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் மோடி இன்று காலை தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

வெங்கையா நாயுடு, தெலங்காணா மந்திரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தெலங்காணா மாநில அவதார தின உற்சவம் தொடர்பாக வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். ட்விட்டர் மூலமாக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நரேந்திர மோடி தெலங்காணா மாநில மக்கள் பலதுறைகளிலும் திறமையை காட்டி உள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்தில் தெலங்காணா மாநிலம் முக்கியமான இடம் வகிக்கிறது என்றும் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

தெலங்காணா மக்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் பெருமைக்கும் நான் இறைவனை வேண்டுகிறேன் என்று தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

இன்று இரண்டு மாநிலங்கள் புது மாநிலங்களாக ஏற்பட்ட நாள் என்று வாழ்த்தியுள்ளார்.

அதன்பின் ஆந்திரபிரதேச மாநில மக்களுக்கு கூட வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி உழைப்பு மற்றும் விடா முயற்சியே இந்த கலாச்சாரத்தின் மறுபெயர் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டு முன்னேற்றத்தில் ஆந்திரப்பிரதேச மாநிலம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் விவரித்துள்ளார். ஆந்திரபிரதேச மாநில மக்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வேண்டும் என்று கோருகிறேன் என்றும் மற்றுமொரு ட்விட்டர் செய்த நரேந்திர மோடி ஆந்திர பிரதேச மாநில மக்களுக்கு கூட வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று தெலங்காணா ஆந்திர பிரதேஷ் இரண்டு மாநிலங்களாக பிரிந்து புது மாநிலங்களாக அவதரித்த நாள் ஆனதால் இரண்டு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
venkaiya naidu
venkaiya naidu

இதே நேரத்தில் தெலங்காணா மாநில மக்களுக்கு உப ராஷ்டிரபதி வெங்கையா நாயுடு தெலங்காணா மாநில அவதார தின விழாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தெலுங்கு இங்கிலீஷ் ஹிந்தி மூன்று மொழிகளிலும் டிவீட் செய்த உப ராஷ்டிரபதி வெங்கையா நாயுடு தெலங்காணாவின் வரலாறு மிகவும் பெருமைக்குரிய வரலாறு என்று போற்றினார். இயற்கை வளங்களோடு வேற்றுமையில் ஒற்றுமை எதிரொலிக்கும் தெலங்காணா என்று புகழ்ந்துள்ளார்.

பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பெருமையோடு நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் தெலங்காணா மாநிலம் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கோருகிறேன் என்று வெங்கையாநாயுடு தெலங்காணா அவதார தின விழாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தெலங்காணா மாநிலத்தில் அவதார தின விழா தொடர்பாக தெலங்காணா அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அன்றைய போராட்டத்தின் நினைவுகளை நினைவு படுத்திக் கொண்டார்கள். அமரர்களின் தியாகங்களுக்கும் லட்சியங்களுக்கும் ஏற்ப தெலங்காணா முன்னேற்றம் சாதித்து வருகிறது என்று அமைச்சர் தன்னீரு ஹரிஷ் ராவ் புகழாரம் சூட்டினார். முதலமைச்சர் கேசிஆர் சாகும்வரை உண்ணாவிரத தீட்சை அறிவித்து மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்து தெலங்காணா மாநிலத்தை சாதித்தார் என்று புகழ்ந்தார். பாரத நாட்டிற்கு தெலங்காணா ஒரு ஆதர்ச மாநிலமாக நிற்கும் என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
telangana minister
telangana minister

மறுபுறம் அமைச்சர் எர்ரபெல்லி தயாகர் ராவு போராட்ட குணத்தோடு கூட தெலங்காணா முன்னேற்றமும் அடையும் என்றும் கேசிஆரின் போராட்டத் திறமை, விடாமுயற்சி அமரர்களின் பலிதானங்கள் காரணமாகவே தெலங்காணா மாநிலம் வடிவம் பெற்றது என்றும் குறிப்பிட்டார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img