ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்த சிரஞ்சீவி தம்பதி!

Published:

chiranjeevi meets governor
chiranjeevi meets governor

தெலங்காணா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தம்பதிகள் ராஜ்பவனில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தெலங்காணா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜூன் 2ம் தேதி முதலில் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹாப்பி பர்த்டே விஷஸ் தெரிவித்த சிரஞ்சீவி செவ்வாயன்று மதியம் ராஜ்பவனில் தன் மனைவி சுரேகா வோடு சேர்ந்து ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தேச சேவையில் தாங்கள் இன்னும் பலப்பல பிறந்தநாட்களை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று முதலில் டுவீட் செய்தார் சிரஞ்சீவி. அதன்பின் செவ்வாய் அன்று மதியம் ஆளுநரை நேரில் சென்று சந்தித்தார்.

அண்மையில் சைரா திரைப்படம் ரிலீஸ் ஆனபோது ஆளுநரை சந்தித்து சைரா சினிமாவின் வரலாற்றை விவரித்து சினிமாவை பார்க்கும்படி கூறினார் சிரஞ்சீவி.

தெலங்காணா அவதார தினம், ஆளுநர் பிறந்த நாள் இரண்டுமே ஜூன் இரண்டாம் தேதி ஒரே நாளில் வந்ததால் தெலங்காணா முதல்வர் கேசிஆர் ராஜ்பவனில் கவர்னர் தம்பதிகளை மரியாதை பூர்வமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

பாரத நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தெலங்காணா மக்கள் மிகநீண்ட அமைதியான போராட்டம் நடத்தி தனி மாநிலத்தை சாதித்துள்ளனர் என்று ஆளுநர் புகழாரம் சூட்டினார். தெலங்காணாவை வளமான ஆரோக்கியமான மாநிலமாக நிலை நிறுத்துவதில் நாம் வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிரஞ்சீவி, கேசிஆரோடு கூட பல அரசியல், சினிமா பிரமுகர்களும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img