April 28, 2025, 3:25 PM
32.9 C
Chennai

குழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணும்னு கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்: கலங்கும் இராணுவ வீரரின் மனைவி!

mathizhakan

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்முவில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீர மரணம் அடைந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் உள்ள சுந்தரபாணி பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி வெத்தலைக்காரன் காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன்( 40) துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இவரின் மனைவி பெயர் தமிழரசி. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் ரோகித் என்ற மகனும், 2-ம் வகுப்பு படிக்கும் சுபஶ்ரீ என்ற மகளும் இருக்கிறார்கள். மதியழகன் கடந்த 1999-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஹவில்தார் பதவியில் பணியாற்றி வந்த நிலையில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது.

ALSO READ:  தில்லி தேர்தல் முடிவுகள்; சாதனைகளும் சறுக்கல்களும்!
mathizhakan

இதுபற்றி மதியழகனின் தம்பி குமார், “எங்க அண்ணன் ரொம்ப துணிச்சல் மிக்கவர். எதையும் உறுதியாக நின்று எதிர்கொள்ளக் கூடியவர். அவருடைய மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த 5 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களித்து விட்டு அன்று இரவு புறப்பட்டுச் சென்றார். அப்போதுதான் நாங்கள் அவரை நேரில் இறுதியாகப் பார்த்துப் பேசினோம்.

அவருடைய குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் அண்ணன் மகன் ரோகித் 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறான். அவனுக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதால் செல்போன் வாங்குவதற்காக இறுதியாக எங்க அண்ணியிடமும் குழந்தையிடமும் பேசிக் கொண்டிருந்தார். இப்படி திடீரென மரணம் அடைந்துள்ளது, எங்க குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது” என்றார் வேதனையுடன்.

தன் கணவரின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து அழுது கொண்டிருக்கும் தமிழரசி, “இனி என் குழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணுமுன்னு கேட்டால் நானென்ன பதில் சொல்லுவேன். கனவுல வந்துட்டு போன மாதிரி உள்ளாட்சித் தேர்தலுக்கு வந்து ஓட்டு போட்டுட்டு லீவுக்கு வர்றேன்னு உடனே கிளம்பிப் போயிட்டாரு. இனி என்றைக்கு என் வீட்டுக்கு வருவார்?” எனத் தேம்பி தேம்பி அழுதார்.

ALSO READ:  தர்பூசணியில் செயற்கை கலர் ஏற்றப்பட்டுள்ளதா? கரூரில் அதிகாரிகள் தீவிர சோதனை!
mathizhakan

ராணுவ வீரரின் மரணத்தால் அந்தப் பகுதியே சோகமயமாக காட்சி அளிக்கிறது.

ராணுவ வீரர் மதியழகன் உடலை இன்று சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதியழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதேபோன்று, பாமக நிறுவனர் ராமதாஸும் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories