December 6, 2025, 1:07 PM
29 C
Chennai

குழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணும்னு கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்: கலங்கும் இராணுவ வீரரின் மனைவி!

mathizhakan

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்முவில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீர மரணம் அடைந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் உள்ள சுந்தரபாணி பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி வெத்தலைக்காரன் காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன்( 40) துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இவரின் மனைவி பெயர் தமிழரசி. இவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் ரோகித் என்ற மகனும், 2-ம் வகுப்பு படிக்கும் சுபஶ்ரீ என்ற மகளும் இருக்கிறார்கள். மதியழகன் கடந்த 1999-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஹவில்தார் பதவியில் பணியாற்றி வந்த நிலையில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது.

mathizhakan

இதுபற்றி மதியழகனின் தம்பி குமார், “எங்க அண்ணன் ரொம்ப துணிச்சல் மிக்கவர். எதையும் உறுதியாக நின்று எதிர்கொள்ளக் கூடியவர். அவருடைய மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த 5 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களித்து விட்டு அன்று இரவு புறப்பட்டுச் சென்றார். அப்போதுதான் நாங்கள் அவரை நேரில் இறுதியாகப் பார்த்துப் பேசினோம்.

அவருடைய குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் அண்ணன் மகன் ரோகித் 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறான். அவனுக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதால் செல்போன் வாங்குவதற்காக இறுதியாக எங்க அண்ணியிடமும் குழந்தையிடமும் பேசிக் கொண்டிருந்தார். இப்படி திடீரென மரணம் அடைந்துள்ளது, எங்க குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது” என்றார் வேதனையுடன்.

தன் கணவரின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து அழுது கொண்டிருக்கும் தமிழரசி, “இனி என் குழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணுமுன்னு கேட்டால் நானென்ன பதில் சொல்லுவேன். கனவுல வந்துட்டு போன மாதிரி உள்ளாட்சித் தேர்தலுக்கு வந்து ஓட்டு போட்டுட்டு லீவுக்கு வர்றேன்னு உடனே கிளம்பிப் போயிட்டாரு. இனி என்றைக்கு என் வீட்டுக்கு வருவார்?” எனத் தேம்பி தேம்பி அழுதார்.

mathizhakan

ராணுவ வீரரின் மரணத்தால் அந்தப் பகுதியே சோகமயமாக காட்சி அளிக்கிறது.

ராணுவ வீரர் மதியழகன் உடலை இன்று சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதியழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதேபோன்று, பாமக நிறுவனர் ராமதாஸும் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories