இரண்டு அடுக்கு சரக்கு ரயில்! இந்தியன் ரயில்வேயின் சாதனை!

Published:

double tucker rail
double tucker rail

இரண்டு அடுக்கு பயணிகள் ரயில் இயக்கி சாதனை படைத்த இந்தியன் ரயில்வே தற்போது மேலும் ஒரு சாதனையை புரிந்துள்ளது பயணிகள் ரயில் போன்று சரக்குப் போக்குவரத்தையும் இரண்டடுக்கு ரயிலில் தொடங்கி முத்திரை பதித்துள்ளது இந்தியன் ரயில்வே …

மேற்கு இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கப்பட்ட தடத்தில் முதல் உயரமான ஓவர் ஹெட் கருவிகளை நியமித்து, வெற்றிகரமாக இரட்டை அடுக்கு சரக்கு ரயில்களை இயக்கி உலக சாதனையை படைத்துள்ளது இந்திய ரயில்வே

இந்த சாதனை உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயின் சமீபத்திய பசுமை முயற்சியாக பசுமை இந்தியாவின் லட்சியப் பணியை இது மேலும் அதிகரிக்கும்.

இதன் மூலம், ஓவர் ஹெட் கருவிகளை நியமித்து இரட்டை அடுக்கு சரக்கு ரயிலை இயக்கும் முதல் ரயில்வே ஆனது, இந்திய ரயில்வே. இதன் செயல்பாடுகள் ஜூன் 10 (புதன்கிழமை) குஜராத்தின் பாலன்பூர் மற்றும் பொட்டாட் நிலையங்களில் இருந்து வெற்றிகரமாக தொடங்கி வைத்து இயக்கிப் பார்க்கப் பட்டது என்று ரயில்வே அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள அரசு சரக்கு ரயில் சேவையில் புதுமை, வேகம் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றை முன்வைக்கிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார் 

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்த கொரோனா காலத்திலும், ஏப்ரல் 1 முதல் ஜூன் 10 வரை, இந்திய ரயில்வே தனது தடையில்லா சரக்கு ரயில் சேவைகளின் மூலம் 178.68 மில்லியன் டன் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது. மார்ச் 24 முதல் ஜூன் 10 வரை 32.40 லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது என்று ரயில்வே அமைச்சகம் கூறியள்ளது.

இதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் மூலம் உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள், பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி, உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img