மோடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்தார் பன்னீர்செல்வம்: வா.மைத்ரேயன்

புது தில்லி:

புது தில்லிக்கு வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராம்நாத் கோவிந்தைப் பார்த்துப் பேசி, வாழ்த்து தெரிவித்துவிட்டு, பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் என்று கூறியுள்ளார் வா.மைத்ரேயன்.

முன்னதாக இன்று காலை வெளியான ஒரு நாளிதழின் பத்திரிகைச் செய்தியில், பன்னீர்செல்வம் கையில் பூங்கொத்துடன் நின்றதாகவும், ஆனால் பிரதமர் மோடி பூங்கொத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு வணக்கம் மட்டுமே தெரிவித்துவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், இதனால் பன்னீர்செல்வம் விரக்தி அடைந்ததாகவும் செய்தி வெளியானது. மேலும், பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்துப் பேச நேரம் கேட்டார் என்றும், ஆனால் பிரதமர் அலுவலகம் அனுமதி கொடுக்கவில்லை என்றும், அதன்பின் பன்னீர்செல்வம் நேரடியாக மைத்ரேயன் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள வா.மைத்ரேயன், நேற்று மாலை பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், மனுவை தாக்கல் செய்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த பன்னீர்செல்வம், பின்னர் அளித்த பூங்கொத்தை மோடி பெற்றுக் கொண்டார் என்பதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது என்று அதனை தம் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் தினகரன் நாளிதழில் வந்த செய்தி உண்மைக்கு மாறானது என்பதற்கு நான் அனுப்பிய புகைப்படங்களே சான்று என்றும் மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories