மோடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்தார் பன்னீர்செல்வம்: வா.மைத்ரேயன்

புது தில்லி:

புது தில்லிக்கு வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராம்நாத் கோவிந்தைப் பார்த்துப் பேசி, வாழ்த்து தெரிவித்துவிட்டு, பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் என்று கூறியுள்ளார் வா.மைத்ரேயன்.

முன்னதாக இன்று காலை வெளியான ஒரு நாளிதழின் பத்திரிகைச் செய்தியில், பன்னீர்செல்வம் கையில் பூங்கொத்துடன் நின்றதாகவும், ஆனால் பிரதமர் மோடி பூங்கொத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு வணக்கம் மட்டுமே தெரிவித்துவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், இதனால் பன்னீர்செல்வம் விரக்தி அடைந்ததாகவும் செய்தி வெளியானது. மேலும், பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்துப் பேச நேரம் கேட்டார் என்றும், ஆனால் பிரதமர் அலுவலகம் அனுமதி கொடுக்கவில்லை என்றும், அதன்பின் பன்னீர்செல்வம் நேரடியாக மைத்ரேயன் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள வா.மைத்ரேயன், நேற்று மாலை பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், மனுவை தாக்கல் செய்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த பன்னீர்செல்வம், பின்னர் அளித்த பூங்கொத்தை மோடி பெற்றுக் கொண்டார் என்பதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது என்று அதனை தம் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் தினகரன் நாளிதழில் வந்த செய்தி உண்மைக்கு மாறானது என்பதற்கு நான் அனுப்பிய புகைப்படங்களே சான்று என்றும் மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories