உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் அறிவிப்பு!

Published:

IMG 20170624 141609 - 2026

உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவர் ரீபாத்
சாரூக்குக்கு ரூ.10 லட்சம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி
அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரிஃபாத் ஷாரூக். இவருக்கு வயது 18.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் இவர் உலகில் மிகச்சிறிய கலாம்சாட் என்ற செயற்கை
கோளை வெறும் 64 கிராம் எடையுடன் வடிவமைத்திருக்கிறார்.

கைக்குள் அடங்கும் இந்த செயற்கை கோளை நாசா நடத்திய கியூப் இன் ஸ்பேஸ்(Cube In
Space) என்ற போட்டியில் கலந்துகொண்ட போது வடிவமைத்துள்ளார். இதில் சிறந்த
செயற்கை கோளாக ஷாரூக்கின் செயற்கை கோள் தேர்வுசெய்யப்பட்டு, கடந்த புதன்கிழமை
மதியம் 3 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது. முப்பரிமாண கார்பன் ஃபைபரின்
இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும் இந்த செயற்கை கோளை ரிஃபாத் ஷாரூக்
மற்றும் அவரது அணியை சேர்ந்த 6 நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், கலாம் சாட் தயாரித்த மாணவர் ரிபாத் சாரூக் தலைமையிலான 6 பேர்
குழுவுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பாராட்டு
தெரிவித்துள்ளார்.

மேலும் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவர் ரீபாத்
சாரூக்குக்கு ரூ.10 லட்சம் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img