கொரோனா: மக்கள் கூடும் விழா, சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே விலகி விடும்: குழந்தைசாமி!

kuzhandai samy

இந்தியாவில் கொரோனாவை ஒழிக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் கே.குழந்தைசாமி பல்வேறு விளக்கங்களை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் பொய் செய்திகளைத் தவிர்க்கவும் ‘கோவிட் 19 நோய் குறித்த உண்மைகள், தடுப்பு முறைகள், விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் மெய்நிகர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கே.குழந்தைசாமி பங்கேற்று பேசியதாவது:

கொரோனா வைரஸ் கைகளால் 80%, பேசும்போது, இருமல், தும்மல்போன்ற நேரங்களில் வெளியேறும்நீர்த் திவளைகளை சுவாசிக்கும்போது 20% பரவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கைகழுவும் பழக்கம் இல்லை. இந்தியாவில் உணவருந்துவதற்காக 6 முறை,மலம், சிறுநீர் கழிக்க செல்லும்போது சுமார் 4 முறை என தினமும்10 முறையாவது கை கழுவுகின்றனர்.

எண்ணெய், கொழுப்பால் ஆனது. அது நீரில் கரையாது. அதனுடன் சோப்பு சேர்த்தால் நீரில் எண்ணெய் கரைந்துவிடும். கொரோனா வைரஸ் கொழுப்பு, புரதங்களால் ஆனவை. கையில் சோப்பு போடும்போது, அதில் வைரஸ்கள் கரைந்து அழிகின்றன.

மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை தொடுவதால் பரவும் கிருமியை, சானிடைசர்கள் அழிக்கும். ஆனால் அழுக்கான கைகளில் உள்ள கிருமிகளை சானிடைசர்கள் அழிக்காது.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

இஸ்ரேலில் கொரோனா பரவத் தொடங்கியதும் முதியவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆரோக்கியமானவர்கள் வெளியில் விடப்பட்டனர். அதனால்அவர்களில் பெரும்பாலோருக்கு தொற்று ஏற்பட்டாலும், லேசான அறிகுறி, அறிகுறி இன்றி இருந்தனர். அதனால் அந்த நாடு சமூக நோய் எதிர்ப்புத் திறன் பெற்றது. தற்போது அந்த நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்தியாவில் முதியோர், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாட்பட்ட தொற்றா நோய் உடையவர்கள், கர்ப்பிணிகள் 40 சதவீதம் பேர் உள்ளனர். 60 சதவீதம் பேர் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர். அவர்களை வெளியில் விடவேண்டும்.

வீடுகளில் தனிமையில் இருப்போர் பல்ஸ் ஆக்சி மீட்டரால் பரிசோதித்துக்கொள்ளலாம். அதில் ஆக்சிஜன் அளவு 95 முதல் 100 வரை இயல்பான அளவு. 95-க்கு கீழ் குறைந்தால் மருத்துவரை நாட வேண்டும். 70 வரை குறையும்போது கூட மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறி தெரியாது. 70-க்கு கீழ் குறைந்தால், அதை சிகிச்சை மூலம் 100 ஆக உயர்த்துவது சிரமம். இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க லேசான அறிகுறி இருந்தாலோ, ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

இந்த காலகட்டத்தில் கபசுரக் குடிநீர், யோகா, பிரணாயாமம், வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை வெயிலில் நிற்பதன் மூலம்வைட்டமின் டி சத்து கிடைக்கும்.இவற்றை செய்வதன் மூலம் கொரோனாவால் உயிரிழப்பு தடுக்கப்படும்.

முகக் கவசம், சமூக இடைவெளியால் 10 சதவீதம், அடிக்கடி தொடும்இடங்களை தூய்மை செய்வதன் மூலம் 10 சதவீதம், சோப்புகளால் கை கழுவுவதால் 80 சதவீதம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும்.அதனால் பொது இடங்களில் அதிக அளவில் கை கழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா பரவும்போது மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்புகளை தயார் செய்வது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு அவகாசம் தேவை. அப்போது முழுஊரடங்கு பயன்தரும். இப்போது முழு ஊரடங்கு பயனளிக்காது. மக்கள் அதிகம் கூடும் விழாக்கள், சுற்றுலா போன்றவற்றை அனுமதிக்காமல் இருந்தாலே, கொரோனா நம்மை விட்டு விலகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குநர் ஜெ.காமராஜ், புதுச்சேரி அலுவலக உதவி இயக்குநர் தி.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

போலீசார் தரப்பில் கொலை வழக்கு தொடர்பாக சாகரின் நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான சாகர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories